Posts

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 1,211-அக உயர்வு...

Image
வேலூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி: 1,211-அக உயர்வு வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையிவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,211-அக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை.

Image
கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை. முதல்வர் பழனிசாமி

இன்று கொரோனா அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள்...

Image
இன்று அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள்! சென்னை - 1,992 மதுரை - 284 செங்கல்பட்டு - 183 க.குறிச்சி - 169 தி.மலை - 142 சேலம் - 109 திருவள்ளூர் - 99 ராமநாதபுரம் - 93 காஞ்சிபுரம் - 92 திருவாரூர் - 87 வேலூர் - 85 தேனி - 62 விருதுநகர் - 61  விழுப்புரம் - 47 திருச்சி - 43

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

Image
மதுரையில் இன்று மேலும் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு - 1,995 குணமடைந்தவர்கள் - 591 சிகிச்சை பெறுவோர் - 1,379 உயிரிழப்பு - 25

போர்க்கள நிகழ்வுகளை ஒரு இலக்கியம் வழி பார்க்கலாம் -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
நல்லது சொல்வோம்- 38.                               சிகப்பு காகம்! கோவிட் 19 ன் கொட்டம் அடங்கவில்லை! அடக்கவோ யாரும் இல்லை! போர்க்களத்தில் அதனை வீழ்த்தவும் முடியவில்லை! இறைவா இதற்கு ஒரு முடிவு சீக்கிரம் கொடு! மக்களை அச்சத்திலிருந்து காப்பாற்று! இன்று ஒரு போர்க்கள நிகழ்வுகளை ஒரு இலக்கியம் வழி பார்க்கலாம்! பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் களவழி நாற்பது என்பது சோழ மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் கழுமலம் என்கிற இடத்தில் நடந்த போரை வர்ணிக்கின்ற 41 பாடல்களைக் கொண்டது! அதில் நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்கள் 22! பல அடிகள் கொண்ட பஃரொடை வெண்பாக்கள் 19 உடையது! சோழ மன்னன் கோச்செங்கணானுக்கும் சேர மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவருக்கும் நடந்த போரை வர்ணிக்கின்ற கவிதைகள்! இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர் ஆவார்! இவர் சேர மன்னனுக்கு மிக உற்ற நண்பர் தன் நண்பனை போர்க்களத்தில் தோற்று சிறையில் அடைக்கப்பட்ட கணக்கால் இரும்பொறையை விடுவிக்க சோழ மன்னனுக்கு பாடிய பாடல்களின் தொகுப்பு என்பது செய்தியாகும்! அப்போதைய போர்க்களத்தி...

ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் கொரானா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...

Image
ராணிப்பேட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பாசறை செயலாளர் சல்மான் தலைமையில் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி  சக்தியை உருவாக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் தொகுதி துணை தலைவர் கிஷோர் குமார் நகர செயலாளர் முகமது அலி மற்றும் நாம் தமிழர் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி...

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கோவிட்-19 சிறப்பு நிதிக்கான காசோலைகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி. வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபீல் அவர்களும் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம். இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.லோகநாதன் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் கண் பார்வையற்ற மாற்றுதிறநாளிகளுக்காக தலா 2 லட்சத்து 10 ஆயிரம்...

Image
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிமுத்து மோட்டூர் அண்ணா நகரில் கண் பார்வையற்ற மாற்றுதிறநாளிகளுக்காக தலா 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய 24 பசுமை வீடுகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபீல் அவர்களும்  திறந்து வைத்து பயனாளி களிடம் வீட்டுசாவிகளை ஒப்படைத்தார்கள்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம். இ.ஆ.ப.,உள்ளார்.

ஒரு உலகம் ஒரு நம்பிக்கை - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

Image
தேசிய எச்ஐவி பரிசோதனை தினம் தொடர் காய்ச்சல் இடைவிடாத இருமல் தலைவலி தசை வலி வாய்/பிறப்புறுப்பில் புண் மூட்டு வலி களைப்புடன் சோர்வு உடல் எடை இழப்பு வயிற்றுப் போக்கு மூச்சடைப்பு நாக்கு/வாயில் நீடித்த வெண்புள்ளி தோல் அரிப்பு/தோல் சொரசொரப்பு மங்கலான பார்வை நகம் வண்ணமிழத்தல் நிமோனியா பூஞ்சை நோய் காச நோய் மூளை சவ்வு வீக்கம்....போன்ற இத்தனை அறிகுறிகளின் குத்தகைதார நோயே எச்ஐவி எனும் பால்வினை நோய்! இந்நோய்க்கான  பரிசோதனை தினமாக.... அமெரிக்கா முதலில் கடைப்பிடிக்க அனைத்து நாடுகளும் வருடந்தோறும் ஜூன் 27 ந் திகதி தேசிய HIV பரிசோதனை தினமாக அனுஷ்டிக்க தொடங்கியது! நோக்கம் HIV மற்றும் அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துதல்! போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில் பாதை வழுவிய மாறுதலில் தானமாக பெறும் இரத்தத்தில் சுத்திகரிப்பில்லா ஊசியில்...நுழையும் எயிட்ஸ் எனும் பால்வினை நோய் தரும் HIV உலகின் பொது சுகாதாரப் பிரச்சினை! வரலாறு 05.06.1981 ல் அமெரிக்கா  நோய் கட்டுப்பாடு&தடுப்பு மையம் ஆண் ஓரின சேர்க்கை ஐந்து நபருக்கு அரிய வகை நிமோனியா கண்டு ஓரின சேர்க்கை புற்றுநோயென முதல் ஆவணம் வெளிய...

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய பூக்கடை களை ஊரிசுமேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்க்கு இடமாற்றம்.

Image
வேலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய பூக்கடை களை ஊரிசுமேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்க்கு இடமாற்றம் செய்யப் படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்கள்.

வேலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கை.

Image
வேலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய காய்கனி கடைகளை குறள் தியேட்டர் எதிரில் உள்ள ஸ்ரீகிருபா வர்த்தக மைதானத்திற்க்கு இடமாற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  

இரண்டாவது நாளாக இன்று அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

Image
இரண்டாவது நாளாக இன்று தமிழக அரசின் ஆரோக்கியம் சிறப்பு திட்டம் விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமில்  கபசுரகுடிநீர் மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி வழங்கினார்.  ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது அதன் அடிப்படையில் வேலுர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்வாறு, கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் ஜுனியர் ரெட்கிராஸ், காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் இரண்டாவது நாளாக 27.06.2020 அன்று வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி வழங்கினார்.   பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  ஒப்படைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முகாமில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் ஆலோசனையின் படி மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி முகாம் பணியில் ...

வேலூர் மலை அடியில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினார் தினேஷ் சரவணன்.

Image
வேலூர் சத்துவாச்சாரி மலை அடியில் குறுகிய தெருக்களில் அதிக வீடுகள் நிறைந்த பகுதிகளில் தெரு தெருவாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் இலவசமாக 1500 பேருக்கு வழங்கப்பட்டது. குறிப்பு: கொரோனாவால் கட்டுபடுத்தப்பட்ட சில தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் காட்டினர். அந்த பகுதியிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாஸ்க் அணியா நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம்...

Image
தமிழகத்தில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் மிகக் கொடிய நோயான கொரோன வைரஸ் தாக்குதலின் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையர் சதீஷ் அவர்கள் நேரடியாக பொதுமக்கள் மாஸ்க் அணியா நபர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினர்.

Image
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் இ.கா.ப..,அவர்களின் வழிகாட்டுதலின்படி  வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலஸ் கேஃப்  ஜங்ஷனில் மாவட்ட காவல் துறை சார்பாக வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள்(Mask) வழங்கினர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.