Posts

டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு ...அமெரிக்கா விலகல்.

Image
வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார மையம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக  அந்த அமைப்பு இயங்கியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால், உலக சுகாதார மையத்துடன் உள்ள அனைத்து உறவையும் முறித்துக் கொள்வதாக  டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் வாழும் சீன ஆராய்ச்சியாளர்களை  உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விலகியதால் உலக சுகாதார மையத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி ...

Image
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில்  இயக்கப்படும். கோவையில் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த  ரயில் மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.   மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்  இதேபோல மதுரை-விழுப்புரம்-மதுரை அதி விரைவு சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு விழுப்புரம் வரும்.  பின்னர், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இதேபோன்று திருச்சி-நாகர்கோவில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை இடையேயும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்குகிறது.  ரயில்கள் புறப்படும், சேரும் மற்றும் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் குறைந்த பட்சம் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே செய...

பிரதமர் மோடி ஊரடங்கு குறித்து அடுத்த ஆலோசனை.

Image
வரும் 31ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துள்ளார். இதில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், மோடி -அமித்ஷா சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதாரம்  பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.     

நடிகர் சூரியின் புதிய லுக் ...

Image
தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம்...

வெட்டுக்கிளியின் ஆட்டம் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ...

Image
கிருஷ்ணகிரி நேரலகிரி கிராமத்தில் படையெடுத்த நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள்! மக்கள் அச்சம் வெட்டுக்கிளிகள் ஆட்டம் தொடருந்து தமிழ்நாட்டிலும் அழிவு ...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஆய்வு...

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து 6 வது முறையாக  காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலின் தீவிரத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான கருத்துக்கேட்புக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந் தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்.இ.கா.ப., மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.  

ஆவின் நிறுவனத்தின் ரோஸ்மில்க் இப்பொது புதிய விலையில் அறிமுகம்.

Image
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் அதிநவீன பாலகத்தில் ஆவின் பெருந்தலைவர் திரு. த.வேலழகன் அவர்கள் இன்று புதியதாக ரோஸ்மில்க் 200 மி.லி. ரூ.20 விலையில் அறிமுகப்படுத்தி முதல் விற்பனையை துவக்கிவைத்தார். உடன் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ஜெயபிரகாஷ், ஆவின் பொதுமேலாளர் டாக்டர்.கணேஷா, துணை பொதுமேலாளார் (தரக்கட்டு பாட்டுப் பிரிவு) திரு.ஜெயச்சந்திரன் மற்றும் ஆவின் ஊழியர்கள்  உள்ளனர். 

கே.வி குப்பத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் .

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சிகள் வாரியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கே.வி.குப்பம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளை சரிபார்த்த போது எடுத்தப்படம். 

அமைதி ...மகத்தான சக்தி... எதையும் சமாளிக்கும் இயல்புடையது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
சர்வதேச அமைதி காப்போர் தினம் அமைதி.... அழகானது ஆழமானது தெய்வீகமானது தேவையானது ! அமைதி..... மனம் சார்ந்தது! அது வெளியே அல்ல.. நமக்கு உள்ளே இருப்பது! அமைதி...... மௌனத்தின் முன்னுரை! சப்தத்தின் பொருளுரை! நிசப்தத்தின்  முடிவுரை ! மனநிறைவின் பின்னுரை! 29.05.2001...முதல் ஐக்கியநாடுகள் சபை மே 29 ஆம் திகதியை சர்வதேச அமைதி காப்போர் தினமாக அனுஷ்டிக்கிறது! முதல் உலகப்போர் கண்ட   சில மனித நெஞ்சம் இரத்த தாகம்  அடங்காமல் அடி வைத்தது இரண்டாம் உலக யுத்தத்திற்கு! சொத்திழப்பும் உயிரிழப்பும் கணக்கலடங்கா இழப்பானது! விதி கணக்கு முடிக்க வழி காண பிறந்தது... ஐக்கிய நாடுகள் சபை! இயற்கை அனர்த்தங்கள் யுத்தத்தின் இடர்பாடுகள்.. இரண்டும் இணைய சமாதானம் ஏற்படுத்த நிவாரணங்கள்  ஒருங்கிணைக்க... அமைதிப்போர்கள்/ கண்காளிப்பாளர்களை உரிய இடங்களில்  பணியமர்த்தும் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது! இத்திட்டம் படி மே 29. ல் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆண்/பெண்களை கௌரவப்படுத்தவும்... இந்நடவடிக்கையின் போது உயிர்நீத்தவர்களை ஞாபகமூட்டவும்  மே 29 ஆம் தேதி சர்வதேச அமைதி காப்போர் தினமாக  பிரக...

புரோட்டின்  என்று இருந்தால் மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்.

Image
பிளஸ் 2 வேதியல் தேர்வு - மூன்று மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின்  என்று ஆங்கிலத்தில் இருந்ததால் கூடுதல் மதிப்பெண். 31 வது வினா.

COVID19 தொற்றுநோய்க்கிடையே வெப்ப பக்கவாதத்தை  மறக்க வேண்டாம்... சி. ம். சி தலைவர் Dr.ஆனந்த் சகரியா .

Image
  வேலூர் கடந்த ஒரு வாரமாக வெப்ப அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது. பல நோயாளிகள் வெப்ப வாதம் மற்றும் வெப்ப தாக்கத்தால்  சோர்வு ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். COVID 19 தொற்றுநோயைப் பற்றி நாம் கவலைப்படும் அதேநேரத்தில், உயிர்களை இழக்கக்கூடிய மற்றொரு நோயான வெப்ப பக்கவாதத்தை நாம் மறந்துவிடக் கூடாது. உடலுக்கு வெளியே உள்ள வெப்பநிலை உடலின்  வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்போது, ​​உடல் வியர்வை மூலம் கூடுதல் வெப்பத்தை வெளியேற்ற வேண்டும். ஆரம்பத்தில் மக்கள் அதிக வெப்பநிலைக்கு ஆளாகும்போது அவர்களுக்கு உடல்  சோர்வு ஏற்படுவதால் அதிகரித்த தாகம், மயக்கம், தலைவலி மற்றும்  சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றைப் அனுபவிக்கின்றனர். இது ‘வெப்பச் சோர்வு’ என்று அழைக்கப்படுகிறது. உடல் வியர்வையின் மூலம் உடல் வெப்பத்தை வெளியிட முடியாதபோது, ​​உடல் வெப்பநிலை உயரநேரிடும். உடல் வெப்பநிலை அதிகரிப்பதை மூளையால் பொறுத்துக்கொள்ள இயலாது. இது அசதி அல்லது மயக்கத்திற்கு வழிவகுக்கிறது. வெப்ப பக்கவாதம் என்பது உயர்ந்த உடல் வெப்பநிலையால்  (40 டிகிரி செல்சியஸ்சிற்கு அதிகமாக) ...

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஜூன் 1 முதல் புதிய வசதி.

Image
ஜுன் 1 முதல் சத்துவாச்சாரியில் புதிய வசதி  வேலூர் என்றாலே அனைவருடைய நினைவிற்கும் வருவது சி.எம்.சி மருத்துவமனை. அந்த அளவிற்கு வேலூர் மக்களோடு இணைந்துள்ளது சி.எம்.சி.  வேலூர் மக்களுக்காக சத்துவாச்சாரியில் ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்து  சி.எம்.சியின் டையகனாஸ்டிக் மையம் தனது  வசதிகளை மேம்படுத்த உள்ளது. இந்த மையம் தனிப்பட்ட சேவைகளை வழங்க உள்ளது. இந்த மையம் திறந்திருக்கும் முழு நேரமும் மருத்துவர்கள், சாதாரண சிகிச்சைகளுக்கும் தனி அறைகள், முழுவதும் செயல்படும் மருந்தகம், ஈசிஜி மற்றும் இரத்த பரிசோதனை வசதி என அனைத்தையும் கொண்ட 'ஷாலோம் குடும்ப சுகாதார மையம்' (SHALOM FAMILY MEDICINE & DAY CARE CENTRE) ஜூன் 1 முதல் செயல்படும். ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பெரும்பாலான ஆரோக்கிய பிரச்னைகளை இந்த மையத்திலுள்ள குடும்ப மருத்துவ நிபுணர்கள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நோயாளிகளை பரிசோதிப்பார்கள். இரத்த பரிசோதனை சேகரிப்பு வசதி காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்படும். மற்ற சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 3 வரை இயங்கும். விரைவில் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்பட...

என்னதான் விஞ்ஞானம் நம் வாழ்வை சுலபமாக்கி விட்டது என்றாலும்...வைரஸ்சிடம் தோற்றல்லவா கிடக்கின்றோம்-கவிஞர் ச.லக்குமிபதி.

Image
நல்லதைச் சொல்வோம் -8 தெய்வம் இருப்பது எங்கே! அது இங்கே!            விடாமல் துரத்தி வருகிறது கோவிட் வைரஸ்! அது  விலகும் நாள் எந்நாளோ! நாம் மகிழ்வு பெறும் நாள் எந்நாளோ! அது வந்த நாள் முதலாய் வாடி நிற்கிறது வையம்! என்னதான் விஞ்ஞானம் நம் வாழ்வை சுலபமாக்கி விட்டது என்றாலும் ஒரு வைரஸ்சிடம் தோற்றல்லவா கிடக்கின்றோம்! கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்! நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் என்கிறார் கவியரசர்! லாக் டவுன் விளிம்பில் விழிநீர் துடைத்தபடி  எண்ணற்ற இல்லாதார் இருந்தபடி இருக்கின்றார்! அவர்களுக்கெல்லாம் இருப்பவர்கள் அன்பையும் கருணையும் காட்டிட முன்வந்தால் அவர்கள் நெஞ்சம் பூவாய் விரியும்! நாலாவது லாக் டவுன் முடியும் நேரம்! வைரஸ் மடியும் நேரம் தெரியாமல் இன்னும் தவிக்கிறது தேசம்! நடக்கட்டும்! இறைவா உன் நாடகமா இது நம்ப முடியவில்லை! பல கோடி மக்கள் பிரார்த்தனைகள் ஒருநாள் பலன் தராமலா போகும்! வலிகளோடு வாழ்வை நகர்த்தும் எங்கள் கண்ணீர் துடைக்க உன் கருணை கரங்கள்  நீளாமலா போகும்! வாழ்வே மாயம் எனும் பாலபாடம் தெரிந்தவர்கள் நாங்கள்! இருப்பது க...

என்ன செய்ய...பாவி மக உலஞ்சு புட்டா ஆனா- பக்கு வமா வெளஞ்சு விட்டா -தா.கவிசெல்வி.

Image
                                   நீர்த்திவலைகள்   நீர்த் திவலைகள்-   பளிச் சென்று பட்டு பட்டாய் சிதறின! பக்கு வமாய் சிலதும் பட்டா சாய் சிலதுமாக சிட்டு   சிட்டாய் உதறின! பதுமை அவள் பளிங்கு சருமத்தில் பட்டுத் தெறிக்குமா? இல்லை- விட்டுத் தறிக்குமா? நல்லது தானே நனைந்தால் கசக்குமா?   என்ன செய்ய?   பாவி மக உலஞ்சுபுட்டா பாதையத்தான்  தொலச்சுபுட்டா   பார்த்து பார்த்து  நடக்கணும்- மீதிப் பாதைய பத விசமா செதுக்கணும்   நீர்த்திவலைகள் நல்லதாய் தெறித்தாலும் நலுங்கிடாம நடக்கணும் -எனவே   தாமரை இலையா இழச்சு கிட்டா! தத்  ரூபமா தன்னை  வெதச்சு புட்டா!   நீர்த்திவலைகள்-   முதலை குதித்து முக்கியது போல-பல மூளை உதிர்த்து கக்கியத னால   முகர முடியா துளி களாய் முழுக்க முழுக்க வலி களாய் மூஞ்சில் தறிக்கும் கலி களாய் மூச்சு முட்டும் ஒலி களாய்-முடிவில், நீர்த் திவலைகள் நீர்த் தவளைகளாய்!   எத்தனையோ தெ...

10ஆம் மற்றும் 12ஆம், வகுப்பு மாணவர்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு...

Image
வேலூரில் 35 ஆண்டுகளாக தொழிற்கல்வி பணியில் இருந்துவரும்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் காலேஜியில், 10ஆம் மற்றும் 12ஆம், வகுப்பு மாணவர்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு... FOR ADMISSION CONTACT - S.YOGANANDAN,M.Sc.,M.Ed., M.Phil. CONTACT - 9566438852