கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும்...


மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறைகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. கல்லூரிகளுக்கு வருவதற்கு முன்பாக மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் வளாகத்தில்  உள்ள நீச்சல் குளத்தை திறக்கக்கூடாது என்றும் மாணவர்கள் கும்பலாக கூட கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், மாணவர்கள் 8445440632 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை அமல்படுத்துவது,  நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை என்பதால்  தமிழகத்தில் விடுதிகளை திறக்காமல் எப்படி கல்லூரிகளை  நடத்துவது என்பதில் உயர்கல்வித்துறை குழப்பம் அடைந்து இருக்கிறது. 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.