பெண் காவலரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஆலங்குளம் காவல்துறையினர்.


தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு. S.முருகன் IPS அவர்களின் உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினருக்கும் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி,அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று ஆலங்குளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் 2312 திருமதி. முருகேஸ்வரி அவர்களின் பிறந்தநாள் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னிவளவன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.காவல்துறையினரின் பணிச்சுமை களுக்கிடையே இவ்வாறு காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விடுமுறை அளிப்பது காவல்துறையினருக்கு மன மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக  தெரிவித்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.