130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில்...
விரைவில் 130 கி.மீ வேகமாகச் செல்லும் ரயில்களில் ஏசியில்லாத பெட்டிகள் கிடையாது - ரயில்வே அமைச்சகம்
130 கி.மீட்டருக்கு வேகமாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்வேதுறையில் வரவுள்ள மாற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நரேன், ‘எல்லா ஏசியில்லாத ரயில்பெட்டிகளும் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தற்போது, பெரும்பாலான வழித்தடங்களில் அதிகபட்ச வேகம் 110 கி.மீட்டராக இருந்துவருகிறது. சிறப்பு ரயில்களான ராஜதானிஸ், சதாப்தி, துரந்தோ ரயில்கள் மட்டுமே 120 கி.மீ வேகத்துக்கு இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் சில ரயில்கள் 130 கி.மீட்டருக்கு மேல் வேகமாக இயக்குவதற்கு தகுதிவாய்ந்தவை. 130 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு ஏ.சி பெட்டிகள் அவசியமானவை. டிக்கெட் கட்டணம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும்.
ரயில்வே துறையை அதிவேகமாக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டுவருகிறது. 110 கி.மீட்டருக்கு குறைவான வேகத்தில் இயங்கும் ரயில்களில் ஏ.சி இல்லாத பெட்டிகள் இருக்கும். ஏ.சி பெட்டியாக மாற்றப்படும் ரயில் கட்டணம் பயணிகளுக்கு ஏற்றவகையில் குறைந்த அளவில் இருக்கும்’ என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment