முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள்...
முன்னாள் சிறைவாசிகளுக்கு 2.25 இலட்டசம் நலதிட்ட உதவிகள்
சிறைத்துறையினருக்கு முக கவசம், கைசுத்திகரிப்பான், கையுறைகள், மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இஆப வழங்கினார்.
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் சிறையிலிருந்து விடுதலையான 9பேருக்கு இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நலதிட்ட உதவிகளையும் சிறைதுறைக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை ஆகியவற்றை வேலூர் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளுக்கும் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் வழங்கினார்.
இவ் விழா மாவட்ட அலுவலகத்தில் 21.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.
நிகழ்வுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுத்து பேசினார்.
வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஆண்டாள், பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி, மண்டல நன்னடத்தை அலுவலர் ஹஜாகாமாலுதீன், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள் (வேலூர்) ஆர்.சரவணன், (செய்யார்) பிரபாவதி குடியாத்தம்-மூவேந்தன் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன், திருமாமறன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் வேலூர் மத்திய சிறை, வேலூர் மகளிர் தனிச்சிறை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிளை சிறைகளுக்கும் முக கவசம், கை சுத்திகரிப்பான், கையுரறகள் ஆகியவற்றையும்
முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு விடுதலையானவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலையானவர்கள் ஆடு, கறவை மாடு வாங்கவும், பெட்டி கடை வைக்கவும், ஊதுபத்தி உற்பத்தி செய்து பிழைக்கவும் உதவிடுமாறு வேலூர், திருப்பத்தூர், ஆகிய நன்னடத்தை அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் மீதான விசாரனை அறிக்கையினை மண்டல நன்னடத்தை அலுவலரின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பிழைக்க உதவிடும் வகையில் தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் இரண்டு இலட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் நிதிஉதவிகளை காசோலையாக வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் வழங்கினார்.
பயனடைந்த பயனாளிகள்
1. ஆர்.ராமலிங்கம், த.பெ. ராமசாமி 2. வி.ரவி த.பெ.வரதமந்திரி 3. சி.சேட்டு த.பெ. சின்னப்பா, 4. அர்சுணன், த.பெ. மாணிக்கம் 5.ஆர்.குப்பன், த.பெ.ராமலிங்கம் 6.எ.ஆறுமுகம், த.பெ.அருணாச்சலம் 7. டி.சாம்ராஜ், த.பெ.துரைசாமி 8.சாந்தி க.பெ. ஏழுமலை 9.கலையரசி க.பெ. ஆப்ரகாம்
பாராட்டு
கரோனா நோய் தடுப்பணிகளை சிறப்பாக செயலாற்றியதற்காக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிச வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் பாராட்டினார்.
முடிவில் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப அவர்கள் கூறியதாவது..
*சிறையிலிருந்து விடுதலையாகும் அவர்கள் தங்களிடம் தொழில் ஏதேனும் தெரிந்திருந்தால் அவர்கள் அதை வைத்து யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை. தற்போது ஜெயில் என்பது சீர்திருத்த மையம் போல செயல்படுகிறது. வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது பாராட்டுதலுக்குரியது. மாநிலத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 2011 முதல் 2020 வரை சிறையிலிருந்து விடுதலையான 142 பேருக்கு 29 இலட்சத்து 85ஆயிரம் வழங்கியுள்ளனர். *
குற்றம் இரண்டு விதமாக நடைபெறுகிறது ஒரு வகை சிலர் தொடர்ந்து தவறுகளை தொடர்ந்து செய்து வருபவர்கள், அவர்களை திருத்துவதற்கு கூடுதல் நேரம் வேண்டும். இரண்டாவது வகை உணர்ச்சிகளின் உந்துதலால் சந்தர்பவசத்தால் இந்த குற்றம் செய்யப்படுகிறது. சில சூழ்நிலைகளால் உந்தப்பட்டு அவர்கள் குற்றாவளியாகிறார்கள். சந்தர்பவசத்தால் குற்றாவாளியாக மாறுபவர்கள் வெளியே வந்தால் திருந்து வாழ விரும்புகிறன்றனர் அவர்கள் மறு வாழ்விற்கு நாம் வாய்புகள் உருவாக்கி தரவேண்டும். இந்த முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறது பாராட்டுதலுக்குரியது.
சிறையிலிருந்து விடுதலையானர்கள் தாங்கள் தொழில் செய்திட விரும்பினால் அவர்கள் தெரிந்த தொழில்கள் செய்ய மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், உள்ளிட்ட பல அமைப்புகள் மூலம் இவர்களுக்கு கடன் உதவி செய்யலாம்.
சிறைத்துறை, முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம், நன்னடத்தை அலுவலர்கள் மாவட்ட நிர்வாகம் இணைந்து அவர்களுக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிறைத்துறையின் சார்பில் முன்னாள் சிறைவாசிகளால் நடைபெறும் தொரப்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கு சிறப்பாக நடைபெறுகிறது. அவர்களும் இயல்பான மனிதர்களாக நடக்க வாய்புகள் வழங்கப்படவேண்டும். என்றார்.
Comments
Post a Comment