Posts

Showing posts from September, 2020

வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா...

Image
வேலூரில் அமையப்பெற்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா மற்றும் ஆற்காடு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா  ஆகிய இரண்டு விழாக்களும்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்  ஏ.பி.சாஹி அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக  நடைபெற்றது. தலைமை நீதியரசர் அமரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். அவ்வுரையில் கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் கீழமை நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதியரசர் எம் சத்தியநாராயணன் வேலூர் மாவட்ட நீதிபதி நீதியரசர் எஸ்எம் சுப்பிரமணியம் வேலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மாண்புமிகு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும்  நீதியரசர் எம் டி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ் விழாவில்  செல்வசுந்தரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வேலூர் மாவட்டம் அவர்கள் வரவேற்புர...

குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா...

Image
பெண்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும்! ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்! வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்  இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊட்டச்சத்து குறித்த ஆட்டோ பிரச்சாரத்தை துவக்கி வைத்து ஊட்டசத்து பெட்டகங்களை  வழங்கியும், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.வி.வளர்மதி மற்றும் காட்பாடி ரோட்டரி சங்கம் தலைவர் ஆர். வினாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய வளரிளம் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் தாய்மார்கள், ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் நலனை பொறுத்தே அமைகிறது என  ஊட்டச்சத்து  மாத விழாவில் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க செப்டம்பர் மாதம் முழுவதும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத...

04.10.2020-ம் தேதி காலை - பிற்பகல் யு.பி.எஸ்.சி.தேர்வு...

Image
 04.10.2020 அன்று நடைபெற உள்ள யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 04.10.2020 ஆண்டு நடைபெற உள்ள யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியத் துறை அலுவலர்கள் 9 தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள் துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேற்படி தேர்வு காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை நடைபெற உள்ளது. மேற்படி தேர்வு வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறுகிறது மொத்தம் 24 36 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலூர்.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்.

Image
 இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ சிகிச்சைகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மருத்துவர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மரு.யாஸ்மின், துணை இயக்குனர் திரு. மணிவண்ணன் (சுகாதாரப்பணிகள்), துணை இயக்குனர் (குடும்ப நலம்) திரு. நெடுமாறன், சுகாதார அலுவலர் திரு. வேல்முருகன், அரசு மருத்துவமனை அனைத்து மருத்துவர்கள், வட்டார மருத்துவமனை அலுவலர்கள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

சீமை கருவேல் மரங்களை அகற்றி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம் தினேஷ் சரவணன்.

Image
வேலூர் மாநகராட்சி வார்டு 21 ஏறியூர் பாறை அருகில் உள்ள குளம் 10 வருடங்களாக பராமரிப்பின்றி இருந்து வருகிறது. அதனை சீரமைத்து தர அந்த பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.  அதன்படி குளத்தை சுற்றியுள்ள சீமை கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றி குளத்தை சுற்றி கரை எழுப்பி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம். மேலும் குளத்தை அழகு படுத்த இருக்கிறோம்.  

வறுமையில் தவித்து வந்துள்ள திருமதி நிர்மலா அவர்களுக்கு தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவியுள்ளார் தினேஷ் சரவணன்.

Image
வேலூர் மாநகரம் பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திருமதி நிர்மலா தனது கணவருடன் வறுமையில் தவித்து வந்தார். தனது ஒரே மகளும் திருமணத்திற்கு பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 இளநீர் கொண்டு தனது தொழிலை தொடங்கியுள்ள இவருக்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் வேண்டும்.  கடை வைத்த 10 வது நிமிடத்தில் ஒருவர் 100 ரூபாய்க்கு இளநீர் வாங்கி சென்றார்.

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி அவர்களை வாழ்த்துகிறோம்...

Image
வாழ்த்துகிறோம்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான ஆசிரியர்  முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன். ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் திரு. G. சேகர் அவர்களை வாழ்த்துகிறோம்.

Image
வாழ்த்துகிறோம்   தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான. திரு. G. சேகர், ஆங்கில பட்டதாரி. ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...  

வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் திரு. M. ராஜா கஸ்பார் அவர்களை வாழ்த்துகிறோம்.

Image
வாழ்த்துகிறோம்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான. திரு. M. ராஜா கஸ்பார்  கணித பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...  

முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் மற்றும் பொருளாருக்கு  மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் பாராட்டு.

Image
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் கரோனா நோய் தடுப்பணிகளை சிறப்பாக செயலாற்றியதற்காக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து  நினைவுப் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சண்முகசுந்தரம், இஆப  அவர்கள் பாராட்டினார். வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.  நிகழ்வுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுத்து பேசினார்.   வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஆண்டாள், பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி,  மண்டல நன்னடத்தை அலுவலர் ஹஜாகாமாலுதீன்,  செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன்,  திருமாமறன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். கரோனா ந...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

Image
போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வாகை சூடி உள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. அதேநேரம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி,  தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்லர் , ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் ஸ்மித் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , டேவிட் மில்லர் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே ...

முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள்...

Image
முன்னாள் சிறைவாசிகளுக்கு 2.25 இலட்டசம் நலதிட்ட உதவிகள் சிறைத்துறையினருக்கு முக கவசம், கைசுத்திகரிப்பான், கையுறைகள், மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இஆப வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் சிறையிலிருந்து விடுதலையான 9பேருக்கு இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நலதிட்ட உதவிகளையும் சிறைதுறைக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை ஆகியவற்றை வேலூர் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளுக்கும் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்,இஆப  அவர்கள் வழங்கினார்.      இவ் விழா மாவட்ட அலுவலகத்தில்  21.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.  நிகழ்வுகளை செயலாளர் செ.நா...

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்...

Image
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக  5068 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான  நடவடிக்கைகளை ரத்து செய்ய  சட்டமன்ற உறுப்பினரிடம் மனு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கையை  வலியுறுத்தி தமிழக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக       முதலமைச்சருக்கு  முறையீட்டு  மனு  அனுப்பப்ப தீர்மானிக்கப்பட்டது.  வேலூர் அதன் அடிப்படையில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார் அவர்களிடம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ஜி.டி.பாபு  ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.. தமிழகத்தில்  ஜனவரி 2019 -ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக  5068 அரசு ஊழியர்கள...

கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகள்.

Image
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஆகியவை தென்படலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 78,399 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,702, 595ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 77.88ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை வெ...

வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Image
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள்...

Image
ராமேஸ்வரம் கோயிலில் கடந்த 12 நாட்களாக சுமார் 2 ஆயிரம் முதல் இரண்டாயிரத்து 500 பேர் வரை சாமி தரிசனம் செய்து சென்ற நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, அதிகாலை முதலே  பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, கோயில் ரதவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள் - ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை - பக்தர்கள் வழிபாடு   ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில்  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக் கவசம்  அணிந்தும் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக் கிழமை அன்று, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாக...

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தோ்வு நிறைவு பெற்றது.

Image
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தோ்வு நிறைவு பெற்றது .3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Image
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குழந்தைகளின் நலனை பாதிக்கும் என கூறியுள்ளனர். 

எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேர்க்கும் நபர்களுக்கு பதவி யேற்றம்...

Image
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்  எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேர்க்கும் நபர்களுக்கு பதவி யேற்றலும் அமைச்சர் கே. சி.வீரமணி அவர்கள் தலைமையில் மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விஐடி பின்புறம் உள்ள அரசு விளையாட்டு திடலை பார்வையிட தமிழக பத்திர பதிவு துறை  அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் வேலை துரிதமாக நடக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். அமைச்சருடன் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே. அப்பு. காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன். காட்பாடி  ஒன்றிய அதிமுக செயலாளர் கே. எஸ். சுபாஷ். வேலூர் மாநகர மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ் இணை செயலாளர் துர்கா மகால் சுரேஷ்.பழைய காட்பாடி கிராம நிர்வாக அதிகாரி‌ அருண்குமார். அதிமுக பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன். பேரவை ரவி. நாராயணன். ஜெய்சங்கர்.. முன்னாள் கவுன்சிலர் இலவரசி ஏழுமலை.. ஆகியோர் அமைச்சர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் துறையினர்...

Image
திருநெல்வேலி மாவட்டம் :09.09.2020 இன்று (09.09.2020) திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் விதமாகவும்,  கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜு அவர்கள் உடனிருந்தார்.  கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர் உட்பட 43 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கியும் நற்சான்றிதழ் வழங்கியும்  பாராட்டினார்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு படி பேருந்து ஓட்டுநர்களுக்கு கபசுர குடிநீர்.

Image
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு படி பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் தினசரி கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது, இரண்டாம் மண்டலம்.

தடை செய்யப்பட்டுள்ளதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு அபராதம்.

Image
பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது அதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு  மாநகராட்சி மூலமும் காவல்துறை மூலமும் அபராதம் விதிக்கப்பட்டது. உதவி ஆணையர் மதிவாணன் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி.

மாவட்ட அமைச்சரிடம் கே.சி.வீரமணி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து ஆசி பெற்றார்...

Image
"மாவட்ட அமைச்சரிடம் கே.சி.வீரமணி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து ஆசி பெற்றார் சூளை கே .எம் .ஆனந்தன். மாண்புமிகு ஏழைகளின் இறைவன் பொன்மனச்செம்மல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு இதய தெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன். மாண்புமிகு தமிழக முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி, மாண்புமிகு தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் நல் வாழ்த்துக்களுடன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஒப்பற்ற தலைவர் மண்ணின் மைந்தர் என் அன்பிற்கும் பண்பிற்கும் போற்றுதலுக்குரிய பாசமிகு தலைவர் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணன் மாண்புமிகு கே சி வீரமணி அவர்களின் நல்வாழ்த்துக்களோடு... வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அன்பு சகோதரர் எஸ்.ஆர்.கே. அப்பு அவர்களின் நல்வழி துணையோடு.. இன்று காட்பாடி வேலூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தை திறந்து வைத்து கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்து எளிய தொண்டனாகிய என்னை வேலூர் மாநகர் மாவட்ட கழக வர்த்தகப் பி...

இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு...

Image
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம், கிளாந்தாங்கல் கிராமம் புஞ்சை சர்வே எண் 34/4 பரப்பு .0.28.50  ஹெக்டர் நிலம், புன்செய் அனாதீனம்  அரசு புறம்போக்கில் வசித்து வரும் 8 நபர்களுக்கு அரசாணை (நிலை )எண் 318 ன்படி வீட்டுமனை பட்டா  வழங்குவது தொடர்பாக மதிப்பிற்குரிய மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் அவர்கள் இன்று (09.09.2020) புலத்தணிக்கை மேற்கொண்டார்.  இப்புலத்தணிக்கையின் போது ஆற்காடு வட்டாட்சியர்  காமாட்சி உடன் இருந்தார்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் நோக்கில் புதிதாக அரசு பணியிடங்கள் எதையும் உருவாக்கக் கூடாது.

Image
அரசுப் பணிகளுக்கு ஆள் எடுக்க இந்திய அரசிடம் பணம் இல்லையா? - நிதி அமைச்சகம் விளக்கம் தேவையற்ற செலவினங்களை குறைக்கும் நோக்கில் புதிதாக அரசு பணியிடங்கள் எதையும் உருவாக்கக் கூடாது என்று நேற்று சுற்றறிக்கை மூலம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை அது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி), ரயில்வே பணிகள் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) உள்ளிட்டவற்றில் வழக்கமான ஆள் எடுப்புகள் தொடரும் என்றும் அதில் எவ்விதமான தடையும் இல்லை என்றும் இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளக நடைமுறைகள் தொடர்பானது என்றும் அது புதிதாக அரசு பணிகளுக்கு ஆள் எடுப்பதை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முன்னுரிமை இல்லாத செலவுகளை குறைத்துக் கொண்டு முன்னுரிமை உள்ள செலவுகளுக்கு மட்டுமே அரசின் வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வருவதாக செப்டம்பர் 4ஆம் தேதி நிதி அமைச்சக...

தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...

Image
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். "விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு" ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆய...

நாடு முழுவதும் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது...

Image
நாடு முழுவதும் மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது .சென்னையில் 5 மாதங்களுக்கு பின் மெட்ரோ ரயில்கள் இயக்கம் .காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு..

தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது...

Image
தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது - மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் . சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கம்.

நாடு முழுவதும் பெரிய அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க ஏத்தர் தீவிரம்...

Image
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஏத்தர் நிறுவனம் தீவிரமாக களமிறங்கி உள்ளது. பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை வைத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுத்து வருகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர் நிறுவனம் தற்போது நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், வர்த்தகத்தை வலுவாக்கும் விதத்தில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"முக்கிய நகர...

கேடிஎம் 750 ட்யூக் தயாரிப்பு பணியில் வரிசைக்கட்டி நிற்கும் பைக்குகள்...

Image
கேடிஎம் 750 ட்யூக், அட்வென்ஜெர் & சூப்பர்மோட்டோ... தயாரிப்பு பணியில் வரிசைக்கட்டி நிற்கும் பைக்குகள் கேடிஎம் முதலீட்டாளர் கண்காட்சியில் புதியதாக 750சிசி ரேஞ்சில் ட்யூக் மற்றும் அட்வென்ஜெர் உள்பட சூப்பர்மோட்டோ ரக பைக்குகளை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் 750 ட்யூக், 750 அட்வென்ஜெர் மற்றும் 750 சூப்பர்மோட்டோ உள்ளிட்டவற்றை அடக்கிய 750சிசி மோட்டார்சைக்கிள் பிரிவை புதியதாக உருவாக்கி வருகிறது. கேடிஎம்-ன் தாய் நிறுவனமான பைரர் மொபைலிட்டி க்ரூப்பின் முதலீட்டாளர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த 750சிசி வரிசை பைக்குகள் அனைத்தும் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான சிஎஃப்மோட்டோ உடனான கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கேடிஎம் பிராண்ட் சிஎஃப்மோட்டோ உடன் 2017ல் இருந்து கூட்டணி வைத்து வருகிறது. இவை இரண்டும் இணைந்து சீனாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரையில் பஜாஜ் ஆட்டோ ...

துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை...

Image
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்த ஆண்டு துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 46 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி, நவம்பர் 3ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக முதலில் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், பின்பு துபாயில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட எட்டு அணிகளும் கடந்த மாதம் துபாயை சென்றடைந்தன. கடந்த ஒரு வாரமாக, அனைத்து அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அனைத்து போட்டிகளும் அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறுமென்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்ப...

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை...

Image
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியீடு . முதல் போட்டி செப். 19 ல் சென்னை, மும்பை இடையே அபுதாபியில் நடைபெறும் .கொரோனா ஊரடங்கு காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

முன்னாள் மாணவர்களால் ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம் ஆகியோருக்கு பாராட்டு.

Image
முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில் நம் காட்பாடி தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களால் தொழிற்கல்வி ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம், தலைமையாசிரியர் நரேந்திரகுமார், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட உதவி அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு காட்பாடி துர்கா மகாலில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்றது.  துர்கா மகால் உரிமையாளர் மற்றும் முன்னாள் மாணவர் ஆர்.சுரேஷ் வரவேற்று பேசினார். மாணவர்களுக்கு வண்ண உடை, குறிப்பேடுகள் வழங்கல் காட்பாடி பகுதியை சார்ந்த 25 மாணவர்களுக்கு வண்ண உடை, மற்றும் குறிப்பேடுகள் ஆகியவற்றை தொழிற்கல்வி ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம், தலைமையாசிரியர் நரேந்திரகுமார், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட...

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்...

Image
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப.,உத்தரவின்படி பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி  வேலூர் பழைய பஸ் நிலையத்தில் வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் பாகாயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டு பேருந்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் கையுறை அணிவது குறித்து மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444

வேலூர் வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாரதப் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கு கோவிட்-19 கொரோணா காலத்தில் வாழ்வாதாரத்தை உயர்த்த கடனுதவி தலா ரூபாய் 10. ஆயிரம் தேசிய வங்கிகள் மூலமாக வழங்கப்படுவது குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர். சண்முகசுந்தரம். தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன். மாநகராட்சி ஆணையாளர் சங்கரன். முன்னோடி வங்கிமேலாளர். ஜான்தியோட்சியஸ் வங்கிமேலாளர். சையத் கலிமுல்லா. பாரத ஸ்டேட் வங்கி ஒருங்கிணைப்பாளர். பாலமுருகன். உள்ளனர்., ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...