வாடிய பயிரைக் கண்டு வாடியது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

அன்பின் வழியது

சைவக்குரவர் நால்வர் சித்தமெல்லாம்
சிவமயமானது வசியமான அன்பு!


இறைவனுக்கு தன் கண்ணை அப்பியது
கண்ணப்பனின் திவ்யமான அன்பு!


மறுபிறப்பிலும் மறவாதமனம் கேட்டது
காரைக்காலம்மை பக்தியான அன்பு!


63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள்
நெக்குருகியது சரணாகதியான அன்பு!


செம்புலப்பெயல் நீரென நெஞ்சமானது
குறுந்தொகை கண்ட காதலான அன்பு!


உலக உயிர்கள் உய்ய மும்மாரி கேட்டது
ஆண்டாளின் பரோபகரமான அன்பு!


தனி மனிதனுக்கு உணவு மறுக்க /ஜகம்
அழிவு பாரதியின் சூளுரையான அன்பு!


வாடிய பயிரைக் கண்டு வாடியது
வள்ளலாரின் வாஞ்சையான அன்பு!


முல்லைக்கு தேர்/ஔவைக்கு கனி
கடையேழுவள்ளலின் ஈகையான அன்பு!


மானிணைவு கலையாமல் தேரோட்டும்
கட்டளை அகநானூறின் விழும அன்பு!


100 புரிதல்/1000 போராட்டங்கள்,
ஒற்றை நம்பிக்கை/பல பேராசையோடு
முகங்கள்/முகவரி தேவைப்படாத,
அருகிலிருக்க உயிரது இயங்கி,
தொலைவு காண என்புதோல் உடலாகி,


இன்பம் மட்டும் கூட்டி/
இதய ராகம் மீட்டும்
அன்பென்ற ஒரு எழுதுகோலால்
வாழ்க்கையின் பக்கங்களை
அழகாக்க முனைந்திடுவோம்!


அன்பின் வழி கண்டு
அதன் வழி நடக்கும் உத்வேகத்துடன்....



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.