சம்பந்தப்பட்ட காட்சியில் நடிப்பவர்கள் தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்...


அதன்படி,  படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிப்பவர்கள் தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கட்டாயம் கையுறை அணிய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை. வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை படக்குழு உறுதி செய்ய வேண்டும் படப்பிடிப்பு தளம், மேக்கப் அறை உள்ளிட்ட இடங்களை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் மேக்கப் மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிய வேண்டும். படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும், நுழைவாயிலில் உடல்வெப்ப பரிசோதனை செய்வது அவசியம் என்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.