Posts

Showing posts from August, 2020

சிரமங்கள் இல்லா சீர்பெறும் வாழ்க்கை கண்ணன் அருள்வான் - கவிஞர் ச. இலக்குமிபதி.

Image
பாஸ் செய்து விட்டோம்!! இ பாஸ் எனும் ஒரு தடை நீங்கியது இன்று!! எத்தனையோ துயரங்களுக்கு இடையில், இந்த ஒரு விடுதலை ஆறுதல் அளிக்கிறது கோவிட்19 கொடுமையில் இருந்து தப்பிக்கும் காலம் எக்காலமோ? நாம் எக்காளமிடும் காலம் எக்காலமோ? வரும் காலமேனும் நிம்மதியை கொண்டுவருமோ? அச்சுறுத்தும் வைரஸ் ஆபத்து அகிலத்தை விட்டு விலகுமோ? கால்வயிறு கஞ்சி குடிப் போரும்,வேலைவாய்ப்பு பெற்று, வறுமையில் இருந்து மீளும் காலம் வருமோ? ஆறு மாதங்களாய் அடி மனசைத் தொட்டு அச்சப்படுத்தி, ரனகலமாக்கிக் கொண்டிருந்த கொரோனா கொடுமை ,நம்மை விட்டு சீக்கிரம் ஓடி ஒழியுமோ? முத்தான முதல்வர் இன்று கொடுத்திருக்கும் சலுகைகள் ,ஆறுதல் அளிக்கின்ற மருந்தாகி ,கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுக்கிறது! ஆலயக் கதவுகளை திறக்கின்ற ஆணை அணைத்து ஆன்மீக உள்ளங்களிலும் தேன் வார்க்கின்றது!! லாக் டவுன் ஆரம்பித்த  மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து, இதோ இந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரம் வரை, சற்றேறக்குறைய 155 நாட்கள் ,தொடர்ந்து ,கொரோனா யுத்தம் என ஆரம்பித்து ,இன்றுவரை பல்வேறு தகவல்களை உள்ளடக்கி பதிவுகளை யாம்  கொடுத்து வந்தோம்!! தினமும், வேலுர் நண்பனும் நாமும் இணைந்து கொட...

தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

Image
தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், முக்கிய அம்சமாக, சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு  மெட்ரோ ரெயில் சேவைக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அரசுப் பேருந்து சேவை செப்டம்பர்1-ம் தேதி முதல், வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது   வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிறிய பொழுது போக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதியும் இந்த தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.    ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் - ஓட்டல், ரிசார்ட், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி   சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்  என அறிவித்துள்ள தமிழக அரசு, இருப்பினும் தவிர்க்க இயலாத பண...

ரெய்னா இந்தியா திரும்பியதாக காரணம்...

Image
துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காத‌தால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல் .தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

அனைத்துக் கடைகளும்  8 மணி  வரை  இயங்க அனுமதி...

Image
அனைத்துக் கடைகளும்  8 மணி  வரை  இயங்க அனுமதி. அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி. வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் உண்டு. சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி. சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள். ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி. விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. - தமிழக அரசு

ராணிப்பேட்டையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்...

ராணிப்பேட்டை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ராணிப் பேட்டை அடுத்த ஆட்டோ நகரில்மும்பை–சென்னை தேசிய நெடுஞ்சாலையோ ரம் நகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அங்கு ரூ.10 கோடி மதிப்பில் பொது தனியார் கூட்டாண்மை திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க முதல் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் உள்ளதாகவும், அதற்கான திட்ட வரைவு அறிக்கை அரசுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிர்வாகவசதிக்காக வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போது ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சி யர் தற்காலிக அலுவலகம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்திலும், எஸ்பி அலுவலகம் நக ராட்சிஅலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய் தடுப்பு மருந்துஉற்ப...

அத்தனையும் நலமாகும் என உரைக்கும் சிம்ம மாதமிது -பெ.தமிழ்ச்செல்வி.

Image
ஆவணியும் சிறப்புகளும் ஆடி போக  ஆவணி வர அத்தனையும் நலமாகும் என உரைக்கும் சிம்ம மாதமிது! மாதங்களுக்கு அரசனென அர்த்தம் கொண்டு.... வேங்கை மாதமென சித்தர்களால் சிறப்புற அழைக்கப் பெறும் மாதம்! ஆவணி ஞாயிறில் சூரிய ஹோரை இருப்பாக.. ஆவணி பிறப்பு குழந்தை ஆன்மீக அறிவோடு வளரும்! தேச நலனுக்கு ஆவணி ஞாயிறு சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்திட நாட்டு நலம் செழிப்புடன் அமையும்! ஆவணி  கிரகப்பிரவேசம் கிரகலட்சுமியை நிரந்தர குடியிருப்பில் நிறுத்தி குடும்பத்தை நிலைப்படுத்தும் மாதம்! ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஆவணியில்... கண் போல பயிரை பாதுகாத்து, வேளாண் மக்கள் ஓய்வெடுக்கும் மாதம்! சஞ்சலமாகஇருந்த அர்ச்சுனனுக்கு ஆத்ம பலமளித்து கீதை உபதேசம் செய்திட கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினம்  வரும் பெருமை மிகு மாதம்! நெடிய உருவ திருவிக்கிரமன் மூவடி இடம் கேட்டு மகாபலிக்கு மோட்சம் அருள ஆவணி மாத  திருவோண நட்சத்திரத்தில் வாமன அவதாரம் எடுத்த மாதம்! காஞ்சி காமாட்சியின் தீர்த்தத்தில் ஆவணி மூலத்தில் நீராட புனிதனாக்கி/மோட்சம் கிட்ட பாதை காட்டும் மாதம்! இளையான்குடி நாயனார்/ குலச்சிறையார்/அதிபத்தர்/ திருநீலகண்டர் .......

வைணவத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே தாசரதி யைத் தெரியும் -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
உங்களுக்கு தாசரதியைத் தெரியுமா?  வைணவத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே தாசரதி யைத் தெரியும்!! தசரத  ராஜாவின் திருக்குமரன் ஸ்ரீராமனை தாசரதிஎன வணங்குவார்கள்!   ராமபிரான் அவதரித்த அதே புனர்பூசம் நட்சத்திரத்தில் ,பூந்தமல்லிக்கு அருகிலுள்ள நசரத்பேட்டை யில் ,1027 ஆம் ஆண்டு ,சித்திரை மாதம் ,புனர்பூச நட்சத்திரத்தில் ,ஆனந்ததீட்சிதருக்கும்ஸ்ரீ ராமானுஜரின் தங்கையான நாச்சியார் அம்மாளுக்கும் ,மகனாக பிறந்தவர் பெயரும் தாசரதி! ஸ்ரீ ராமானுஜரின் பிரதமர் சிஷ்யராக மாறி ,அவருக்குப் பின்னால், சிஷ்யர்களுக்கு முதல்வராக இருந்து வழி நடத்தியதால், எல்லோராலும் முதலியாண்டான் என அழைக்கப் பெற்றவரின் இயற் பெயர்தான் அது!! வைணவம் என்ற உடன் ஸ்ரீராமானுஜரின் திருநாமம்தான் முதன் முதலில் நினைவுக்கு வரும்! அதேபோல் ஸ்ரீராமானுஜர் என்றவுடன் முதலியாண்டான் திருப் பெயரே முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வரும்!! அந்த அளவிற்கு ஆச்சாரியாரின் மனதை கவர்ந்தவர் இவர் துறவு மேற்கொண்ட போது எல்லாவற்றையும் துறந்த என்னால் முதலியாண்டானை துறக்க முடியவில்லையே என பெருமைப்பட்ட ராமனுஜரால் சொல்லப்பட்டவர்! ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டபோ...

குளிர் வாட்டிய மயிலுக்கு போர்வை வழங்கிய பேகனிடம் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பும் மனிதமும் அன்பே பிரதானமென கை கோர்த்து இது தான் நேசமென பறை சாற்றும் உளமுள்ள மனிதமே மகானாகும்! அன்பு மனிதமானது..... வழி தடுத்த முல்லைக்கு தேர் அளித்த வேள்பாரியிடம்! குளிர் வாட்டிய மயிலுக்கு போர்வை வழங்கிய பேகனிடம்! மூப்பின்றி நீள்நாள் வாழ ஔவைக்கு நெல்லி ஈந்த அதியமானிடம்! தாய்ப்பசு நீதி காண தேர்க்காலுக்கு மகனை வைத்த மனுநீதியிடம்! பன்றிக்கறி படைத்ததோடு சிவனுக்கு தன் கண் அப்பிய திண்ணனிடம்! புறாவின் எடைக்கு நிகராக பருந்துக்கு தன் சதை தந்த சிபியிடம்! மும்மாரி மழை கேட்டு ரங்கனுக்கு தன்னை அர்ப்பணித்த ஆண்டாளிடம்! மண்ணுயிர் காக்க தன்னுயிர் மறந்து சேவைகளாற்றும் மருத்துவர்/காவலர்/ செவிலியர்/துப்புரவாளரிடம்! தெருவோர தொழுநோயாளிகளை  அரவணைத்த தெரசாவிடம்! பசித்த வயிற்றுக்கு புசிக்க உணவளித்த வள்ளலாரிடம்! 6000 பள்ளிகள் திறந்து கல்விக்கண் திறந்த காமராசரிடம்! சுற்றம் ஒதுக்கிய குழந்தை/முதியோர் நெறிவாழ்வு காணும் இல்லங்களிடம்! விழிகளுக்குள் அன்பிருக்கும் வரை... இரக்கம்/கருணை/ஜீவகாருண்யம்/ பந்தம்/பாசம்/விசுவாசம்/காதல்/ பக்தி/அருள்/அபிமானம்...எனும் அத்தனை வடிவிலும் மனிதம் பரிணமிக்கும்! மானுடம்  வ...

பிரயாணம் எனும் சொல்லுக்கு செலவு எனும் பொருள் தந்தவர் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
வாழ்வின் இலக்கணமான திரு.வி.க! திரு.வி.கல்யாணசுந்தரனார்.... பழமையின் பிரதிநிதி....ஆனாலும் புதுமையின் சங்கநாதம்! கொச்சை சொல்/வசைக் குறிப்பற்ற தீஞ்சுவைப் பேச்சாளர்! மேடைப்பேச்சுக் கலையின் வித்தகர்! தேசபக்தன்/நவசக்தி  இதழ்களின் நாயகனாகி... 50 நூல்கள் படைத்த எழுத்துச்சிற்பி! தமிழ்மொழி வளர்ச்சிக்கு வித்தானவர்! படித்த அறிவாளி/ஏடறியாத் தொழிலாளர்களை கவர்ந்த  செழுந்தமிழ்ப் பாவலர்! இலக்கியம்/இலக்கணம்/அரசியல்/ சமயம்/சமரசம்....அனைத்தும் அடங்கிய மூன்றெழுத்தானவர்! தொட்டவற்றை பொன்னாக்கும் எழுத்தாளராக கோல்ட்ஸ்மித்தால் புகழ்மகுடம் கண்டவர்! மனைவி ஆறாண்டில் மரணம் காண மறுமணம் நாடாத உறுதியோடு.... பெண்ணின் பெருமை மதித்தவர்! சாந்தத்தின் வடிவமாகி, நல்லன கொண்டு தீயன விலக்கும் நோக்கம் தரித்தவர்! பிரயாணம் எனும் சொல்லுக்கு செலவு எனும் பொருள் தந்தவர்! திராவிடரும் காங்கிரசும்...அரசியல் கன்னிப் பேச்சுக்கு தலைப்பாக்கியவர்! தன் பெயர் முதல் ஈரெழுத்தை கல்கியின் பெயரில் தானமானவர்! தமிழனாகப் பிறந்து  இந்தியனாக வாழ்ந்த திரு.வி.க.வின் புகழ் தரணியிருக்கும் வரை  தளர்வு காணாமல் உலவிடும்! முனைவர்.பெ.தமிழ்ச்செல...

வாடிய பயிரைக் கண்டு வாடியது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பின் வழியது சைவக்குரவர் நால்வர் சித்தமெல்லாம் சிவமயமானது வசியமான அன்பு! இறைவனுக்கு தன் கண்ணை அப்பியது கண்ணப்பனின் திவ்யமான அன்பு! மறுபிறப்பிலும் மறவாதமனம் கேட்டது காரைக்காலம்மை பக்தியான அன்பு! 63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள் நெக்குருகியது சரணாகதியான அன்பு! செம்புலப்பெயல் நீரென நெஞ்சமானது குறுந்தொகை கண்ட காதலான அன்பு! உலக உயிர்கள் உய்ய மும்மாரி கேட்டது ஆண்டாளின் பரோபகரமான அன்பு! தனி மனிதனுக்கு உணவு மறுக்க /ஜகம் அழிவு பாரதியின் சூளுரையான அன்பு! வாடிய பயிரைக் கண்டு வாடியது வள்ளலாரின் வாஞ்சையான அன்பு! முல்லைக்கு தேர்/ஔவைக்கு கனி கடையேழுவள்ளலின் ஈகையான அன்பு! மானிணைவு கலையாமல் தேரோட்டும் கட்டளை அகநானூறின் விழும அன்பு! 100 புரிதல்/1000 போராட்டங்கள், ஒற்றை நம்பிக்கை/பல பேராசையோடு முகங்கள்/முகவரி தேவைப்படாத, அருகிலிருக்க உயிரது இயங்கி, தொலைவு காண என்புதோல் உடலாகி, இன்பம் மட்டும் கூட்டி/ இதய ராகம் மீட்டும் அன்பென்ற ஒரு எழுதுகோலால் வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்க முனைந்திடுவோம்! அன்பின் வழி கண்டு அதன் வழி நடக்கும் உத்வேகத்துடன்.... முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வா...

ராமாயணத்தை பக்தர்களுக்கு பல்லாண்டுகளாக திருமலையில் சொல்லிக் கொடுத்து வந்த ஞானாசிரியர் இவர் -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
வையம் போற்றும் வைணவத்தில், பன்னிரு ஆழ்வார்கள் எல்லோருக்கும் தெரியும்! ஆச்சாரிய பெருமக்களில் எல்லோருக்கும் தெரிந்தவர் விசிஷ்டாத்வைதம் தந்த ஸ்ரீ பெரும்புதூர் உலகிற்கு தந்த, உடையவர் என்னும் உத்தமரான ஸ்ரீ ராமானுஜர்!! ஒருமுறை  ,ஸ்ரீ எதிராஜ ஸ்ரீ ராமானுஜர், மலையப்பர் தரிசனத்திற்காக, திருமலைக்கு விஜயம் செய்கிறார்! அவரை வரவேற்க திருப்பதி அடியார் பெருமக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்!! திருப்பதியில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த பெரிய திருமலை நம்பி திருமலையின் நுழைவாயிலில் இருந்து அவரை வரவேற்க அங்கே காத்துக் கொண்டிருந்தார்!! ஸ்ரீ ராமானுஜரின் தாய்மாமன் அவர்! வயதில் மூத்தவர் ஆனாலும் இளையவரான ஸ்ரீ ராமானுஜரை வரவேற்று அழைத்துப்போக ஊர் எல் லையில் நின்று கொண்டிருக்கிறார்! திருப்பரியட்டபாறை என்கிற இடத்திலிருக்கிறார்கள் எல்லோருமாக! அதோ சாமிகள் வந்து விட்டார்கள்! என்கிற கோஷம் எங்கும் கேட்கிறது !கையில் தண்டம் தாங்கி ,மேனியில் காவியுடை அணிந்து, மனிதநேயம் வெளிப்படுகிற திருமுகம் மண்டலத்தோடு ஸ்ரீ ராமானுஜர்  பெரிய திருமலை நம்பிகள் முன் வந்து நிற்கிறார்!! அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவரான தாங்...

தொண்டர்களின் நாடித்துடிப்பே கண்ணீர் அஞ்சலி.

Image
குமரி மாமன்னருக்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றோம்.

ஏழை பங்காளனுக்கு இதய அஞ்சலி...

Image
காங்கிரஸ் பேரியக்கத்தின் புன்னகை மன்னனே கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.

புன்னகை மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி...

Image

மாமன்னன் மறைவுக்கு இதய அஞ்சலி...

Image

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல்...

Image
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல் தெரிவித்துள்ளது. எச்.வசந்தகுமாரின் அகால மரணத்தால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று கட்சி தலைமை வருத்தம் தெரிவித்துள்ளது. அவர் தீவிர காங்கிரஸ்காரர், மக்களின் உண்மையான தலைவர் மற்றும் அன்பான எம்.பி என்று கூறியுள்ளது.

மழை தரும் சாறல் தரும் சுகமாக, நினைவுகளை அசை போடும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
இனி எல்லாம் சுகமே சீனா/இத்தாலி அதிபர்கள் கூட்டமே கூடாதென சொல்ல/அம்மக்கள் கேட்க/ கொரானா அங்கே கட்டுக்குள் அடங்கிட, தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள் செய்திட, ஏடிஎம் மைய தொடும் எண் பலகையை கிருமிநாசினியால் பாதுகாவலர் துடைக்க, குப்பை/கழிவுநீர் அகற்றி சுகாதாரம் காண, சாலையோர உணவகம் சுத்தம் பேண, புகையிலை/எச்சில் துப்புதல்/ மூக்கு சிந்துதலில் வாஷ்பேசின் துணையுடன் விழிப்புணர்வினை மக்கள் பெற்றிட, இருமல்/தும்மலில் வாய் பொத்திட, மருந்தகங்கள் இடைவெளி கடைபிடிக்க, முட்டை/இறைச்சி வேகவைத்து உண்ண/ வன விலங்கருகே பாதுகாப்புடன் செல்ல, ரூபாய் நோட்டு பிளவுஸுள் வைக்காத, அரசு பள்ளியில்.... விலை மதிப்பில்லா கல்வியை விலையில்லாமல் பெற்றிட, கொரானா முன்....புத்தகம்/நோட்டு/ அறுசுவை உணவு/நூலகம்/சீருடை/ மிதிவண்டி/முப்பருவ திட்டம்/வகுப்பறை/ கொரானா பின்.....ஆன்லைன் வகுப்பு/ மடிக்கணினி பாடம்/புத்தகம்/ அரிசியுடன் பருப்பு விநியோகம் ஆரோக்கிய சமுதாயம் இப்படி அமைந்திட, மழை தரும் சாறல் தரும் சுகமாக, நினைவுகளை அசை போடும் நிதர்சன சுகம் அமைய, யாதுமாகி தெரியும் இறைவனருளிலே இனி எல்லாம் சுகமே! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ...

உடையவர் என போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜருக்கு இரண்டு அடியார்கள் -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
கண்ணுக்கு குடைபிடித்த ஒருவர்! புண்ணிய காவிரியில் ஸ்நானம் முடித்து ,அடியார்கள் புடை சூழ, அரங்கன் ஆலயம்  நோக்கி நடந்தார். எதிராஜர்! எதிராஜரான இராமனுஜருக்கு முன்னே, வீதியில் வலிமை  மிக்க ஆஜானுபாகுவான ஓரு பயில்வான் ,, ஒல்லியான மெல்லிய மங்கை ஒருத்திக்கு குடை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தான்! பட்டப்பகல்! வெய்யில் அதிகம் இல்லை!! மக்கள் இந்த காட்சியை பார்த்தபடி வியந்து கிடந்தனர்! உடையவர் என போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜருக்கு இரண்டு அடியார்கள் மிக மிக முக்கியம்! ஒருவர் முதலியாண்டான் !இன்னொருவர் கூரத்தாழ்வார்!!! அருகிலிருந்த முதலியாண்டானைப் பார்த்து,ஆண்டான்! அதோ போகிறானே ஒரு மல்லன் குடை பிடித்தபடி !அவனை இங்கே அழைத்து வா என ஆணையிட்டார்! ஆச்சாரியாரிடம் வந்து அந்த மல்லன் வணங்கினான்! ஏனப்பா !இப்படி பட்டப் பகலில் வெயில் அதிகம் இல்லாத நிலையில் குடை பிடித்தபடி  அந்தப் பெண்ணுக்கு பின்னால் போகி  றாய்? என ஆச்சாரியார் வினவினார்! சுவாமி! என் பெயர் பிள்ளை உறங்கா வில்லி! அவள் என் மனைவி பொன்னாச்சி! அவளுடைய கண்கள் மிக அழகாக இருக்கும் ! அவளுடைய அழகு கண்கள் வெயில் பட்டு அழகு குலைந்து விடக்கூடாது ...

வேலூர் மாவட்டம் -30 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டிகள்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3௦ பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சலவைப்பெட்டிகளை வழங்கினார். உடன் கோட்டாட்சியர்கள் திரு.கணேஷ், திரு.ஷேக்மன்சூர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி.பூர்ணிமா உள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் மரணமடைவதை தடுத்திட செயல்படுவது குறித்து ஆய்வுக் கூட்டம்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கொரோனா பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்திடவும் ஏற்கனவே பலவித நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தாக்கத்தால் மரணமடைவதை தடுத்திடவும் போர்கால அடிப்படையில் செயல்படுவது குறித்து ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், துணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர்.மணிவண்ணன் மற்றும் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.

கண் முன்னே தோன்றினாள் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
கலைச் சொற்களில் பெண் கண் முன்னே தோன்றினாள் என் நிஜமான கிழத்தி! அண்ணாந்து தான் பார்க்கணும் கரும்புல் உயரம் என் தேவதை! நான் துயர் படும் போது அவள் நுவல் எனக்கு மந்திரம்! இருப்போர்க்கும் இல்லாதவர்க்கும் தக்கடைப் போல நியாயம் தான்! கூட்டம் தான் எங்கும் கூடும் அவளின் கருத்து ஓர்ப்ப! பார்த்துக் கொண்டே இருக்கலாம் பிழம்பு....அழகோ அழகு பார்க்க பார்க்க சலிக்காது! குழலியின் மகிமை போல் பூஜைக்கு உகந்தவள்... கடவுளின் அம்சம் தான்! வண்ணம் கொண்ட பிடியலவள் அவளுக்கு நிகர் அவளே! பெரும் கும்பலின் மத்தியில் அவளோ என்றுமே தமி! சுற்றத்தார் அனைவரின்  நல்வாழ்விற்கு சூழ்வு செய்வாள்! இதுவரை எங்கும் நுகைதல் அவளிடத்தில் கண்டதில்லை...இனி காணப் போவதும் இல்லை! இப்படைப்புகளை கொண்ட இவளை சுளகத்தில் வைத்து கொண்டாடுவேன்! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை...632513. 9940739728.

நிச்சயம் இந்தப் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
கணபுரத்தாள்!  நிச்சயம் இந்தப் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை!! வைணவத்தில் ஆழங்கால் பட்ட வர்க்கு, கணபுரத்தாள்.  எனும் பெயர் மிகவும் பரிச்சயமான ஓன்றாகும்!! வைணவ ஆச்சாரியர் பெருமக்களில் நம்பிள்ளை என்னும் பெரியார் ஆச்சாரியர்களின் மிகச் சிறந்தவராக விளங்கியவர்! நம்பூர்வரதர் என்பது அவரது இயற்பெயர் ஆகும்! அவருக்கு நஞ்சீயர் குருவாக இருந்தார் என்பது வரலாறு!! ஒருமுறை நம்பிள்ளை காவிரிக்கரையின் அந்தப்புறம் அதாவது திருவெள்ளரை எனும்திருத்ததலத்தில் தங்கியிருந்து, மாலை, காவிரியின் மறுகரையில் இருக்கும் திருவரங்கத்திற்கு வர விரும்பி காவிரிக்கரையோரம் வந்து நின்றார்! கூடவே நிறைய அடியார் கூட்டம்!ஓடக்காரன் ஆச்சாரியா பெருமகனார் ஏற்றிச்செல்ல ஆழமாய் வந்து நின்றான் எல்லோரும் ஓடத்தில் ஏறிச் செல்ல ஓடம் நகர்ந்தது! காவிரியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது! ஓடக்காரன் நிலைகுலைந்து போனான்! சரியான இருட்டு ! பேய் காற்று !பெருவெள்ளம்!!தடுமாறியது ஓடம் ! ஓடக்காரனோ  ஓடத்தில் இருந்த  எல்லோரையும் பார்த்து ,ஆச்சாரியாரை நாம் காப்பாற்றவேண்டும் என்றால், நம் பிள்ளை நமக்கு வேண்டும் என்றால், நாளைக்கு...

ஓடுதலும்/குதித்தலும் ......நதிகளின் விடுதலை - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
விடுதலை யாருக்கும் அடிபணியாமல் கவிழ்தலும்/விடிதலும் .....வானத்தின் விடுதலை! யாரையும் உள்ளங்கையில் தாங்குவதும்/அதிர்வதும் .....நிலத்தின் விடுதலை! அலைகளால் கரையை நித்தமும் தொடுவதும்/விலகுவதும் .....கடலின் விடுதலை! யார் வந்தாலும் நிழல் தந்து பூப்பதும்/காய்ப்பதும் .......தாவரங்களின் விடுதலை! அருகம்புல்லில் அழகாக துயில்வதும்/கதிரவன் வர மறைவதும் ......பனித்துளிகளின் விடுதலை! ஓடுதலும்/குதித்தலும் ......நதிகளின் விடுதலை! அடங்குதலும்/உயர்தலும் .......குளம்/ஏரிகளின் விடுதலை! குவிதலும்/விரிதலும் .......பூவிதழ்களின் விடுதலை! கொல்லுதலும்/கொல்லப்படுதலும் .......மிருகங்களின் விடுதலை! சுயமாக சிந்தித்தலும் சிந்தித்ததை அச்சமின்றி வார்த்தைகளால் செயல்படுத்தலும் மனிதனுக்கான விடுதலை! ஆனால்..... சுயமாக சிந்திக்காத வரை மனிதா....! உனக்கும்/விடுதலைக்கும் இடைவெளி அதிகமே! முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வாலாஜாப்பேட்டை....632513 9940739728

தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில் புரிதலும்/சமாதானமும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
இப்படி இருந்தால் எப்படி!? காலத்தோடு கண்விழித்து பள்ளி/கல்லூரி சென்று  பாடம் படித்து திறமை வெளிக்காட்டுவது கண்ணாமூச்சியாக மாறி காணொளி கல்வியாகி... காலங்கள் இப்படியிருந்தால் மேற்படிப்பு நீட் தேர்வுகள் எப்படியோ? நாட்டிலேயே 26 வது இடத்தில் குஜராத்தின் கல்வி நிலையிருக்க/ புதிய இந்தியா கனவு நிலை எப்படியென இப்படி ஒரு  கேள்வி கேட்கிறார் ராகுல்காந்தி! தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில் புரிதலும்/சமாதானமும் மறைந்து ஊடல்களும்/கூடல்களும்  இல்லாத நிலை வந்திடவே வசந்தமாகும் வாழ்விற்கு வழி எப்படி வரவேற்பாகும்? விமான ஓடுபாதை முடிந்து கட்டுக்குள் விமானம் வரும்   புல்பாதை பரப்பின் நியதி  கோழிக்கோட்டில் காலாவதியாக /19 பேரின் உயிர்ப்பலி இப்படித்தானே அமைந்திடும்! கன்னத்தில் அறைந்து சொல்லும் கொரானா பாடம் மறந்து இருசக்கரவாகனத்தில்  மாஸ்க் இன்றி மூவர் போக எப்படி மரணம்  வாசல் அழைப்புமணியை அடிக்காமல் போகும்? அரசாங்கம் தந்த வீடுநிரப்பு போராட்டம்/ வாழ்வாதாரம் 4 மாதங்களாக கேள்விக்குறி நிலைமையாக/ வயிற்றுக்குச் சோறிடல் எப்படியென ஆதங்கமான கோபம் இப்படியாகுமா? எதற்கும்/எவருக்கும் அஞ்சோமென ...

யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு உறவாடி -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அண்ணா இலக்கு யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு                                                   உறவாடி, வேர் விட்டு பரந்த தமிழின உணர்வு                                                        கிளறி, திக்கெங்கும் இனவிடுதலை உணர்வு                                                 எழச்செய்து, தேர்தல் வெற்றியாக அறுவடை                                                   செய்தவர்! தேர்தல் அரசியலை இலக்காக்கி, அடைய முடியாதென்ற திராவிட தேசிய                 ...

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்...

Image
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.   இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 28 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.   வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 863 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-   அமெரிக்கா       -  பாதிப்பு - 59,99,577, உயிரிழப்பு - 1,83,639, குணமடைந்தோர் - 32,96,299 பிரேசில்       -    பாதிப்பு - 37,22,004, உயிரிழப்பு - 1,17,756, குணமடைந்தோர் - 29,08,848 இந்தியா...

கந்தர் அலங்காரம் என்பது கந்தனுக்கு அலங்காரம் என்று பொருள்படும் - கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
நல்லவர்களுக்கு கோபம் வந்தால் கல்லால் அடிக்க மாட்டார்கள் சொல்லால் அடிப்பார்கள்! அப்படித்தான் ,அருணகிரிநாதர் பொருளின் மீது ,சேர்த்து வைத்த பணத்தின் மீது ,அழுத்தமான பற்றை வைத்திருப்பவர்களைப்பார்த்து, மதியிலி காள் !  என்று அழைக்கிறார்! பின்பு இரக்கம் வருகிறது அவருக்கு! பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றீர்களே என்று அவர்களைப் பார்த்து இரக்கப்படுகிறார்!!கோழிக் கொடி யானுடைய அடியை பணிந்து அருள் பெற்றால் இந்த குவலயத்தில் நல்லபடி வாழலாம் ! அப்படி வாழ தெரிந்து கொள்ளாதவர்கள்  மதியிலிகள் என்பது அருணகிரிநாதர் உடைய கருத்தாக இருக்கிறது!கோழிக் கொடியன் யார் ? முருகப்பெருமான்! அவருடைய திருவடிகளை பணியாமல் இந்த உலகத்தில் வாழ விரும்புகிறவர்கள் புத்தி அற்றவர்கள் என்பது அவருடைய கருத்து! பதினைந்தாம் நூற்றாண்டில், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில், தோன்றிய அருணகிரிநாதருக்கு முருகன் நேரடியாக வந்து திருக்காட்சி தந்து ,அவன் நாவிலே வேல் கொண்டு எழுதினார் ! திருப்புகழ் ,கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் போன்ற எண்ணற்ற புகழ்பெற்ற நூல்...