ஆதரவின்றி தவித்த பெண்மணிக்கு நலத்திட்ட உதவிகள்...மாவட்ட ஆட்சித்தலைவர்.
வேலூர் மாவட்டம் அலமேலுரங்கபுறம் நெடுஞ்சாலைசாலை ஓரம் வீடு இடிந்த நிலையில் ஆதரவின்றி தவித்த காவியா என்ற 1௦ வயது மகளுடன் தவித்த கணவனை இழந்த பெண்மணி திருமதி கலைவாணிக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர்கிளை சார்பில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப. அவர்கள் ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்கள், சமயல் பாத்திரங்கள், உடைகள், பெட்ஷீட்கள், கம்பளிபோர்வைகள், உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.1௦௦௦ மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும் வழங்கி மாற்று இடத்தில் பட்டா வழங்கி பசுமை வீடு கட்டித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடன் இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை செயலாளர் திரு.இந்தர்நாத், வட்டாட்சியர் திரு.ரமேஷ் உள்ளனர்.
Comments
Post a Comment