Posts

Showing posts from July, 2020

இளம் வயதிலேயே மல்யுத்தம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
தீரன் சின்னமலை நினைவு தினம் இந்திய போராட்ட வீரர், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து/ கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர், கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட, ரத்தினசாமி கவுண்டர்/ பெரியாத்தாவிற்கு மகனாக 17.04.1756 ல் பிறந்து, 31.07.1805 ல் மண்ணுலகம் விட்டு மறைந்த  தீரன் சின்னமலையின் நினைவு தினம்! பிறப்பு ...ஈரோடு மேலப்பாளையத்தில் இறப்பு...சங்ககிரியில் அடக்கம்....ஓடாநிலையில். ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டம் சென்னிமலை அருகில் மேலப்பாளையம் சிற்றூரில் பிறந்தவர்! இயற்பெயர் ...தீர்த்தகிரி கவுண்டர்! பழையகோட்டை பட்டைக்காரர் மரபு சார்ந்தவர்! தீர்த்தகிரி சர்க்கரை எனும் பெயரானவர்! இளம் வயதிலேயே மல்யுத்தம்/தடி வரிசை/ வில்பயிற்சி/ வாள் பயிற்சி/சிலம்பாட்டம்...போன்ற போர்ப்பயிற்சியினை சிவந்தாரையர் பார்வழி வந்தாரிடம் கற்றுக் கொண்டவர்! கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு செல்வதை அறிந்து, அப்பணத்தினை கவர்ந்து ஏழைகளுக்கு விநியோகித்தார்! வரி தண்டல்காரர்களிடம்... "சென்னிமலை சிவன்மலைக்கிடையில் சின்னமலை பறித்தது" ...என சொல்லச் சொன்னவர்! அன்றிலிருந்து சின்னமலை என அழைக்கப்...

மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

Image
ஆணையர் உத்தரவு பெரில் இன்று காலை அலமேலு மங்காபுரம் அம்மா உணவகத்தில் இட்லி மற்றும் சாம்பார் தரமாக உள்ளதா என சுவைத்து ஆய்வு செய்யப்பட்டது, நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் சுவையாக செய்ய  அறிவுறுத்தப்பட்டது.

01-08-2020 முதல் சம்பளம் மற்றும் பண பரிமாற்ற குறித்து விளக்க கூட்டம்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சாபில் 01—08—2020 முதல் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகள் தொடர்புடைய சம்பளம் மற்றும் பண பரிமாற்ற பட்டியல்கள் (I.F.H.R.M.S. ) மூலம் முழுமையாக கணினி வழியாக  ஏற்பது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. உடன் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மண்டல இணைஇயக்குநர் திருமதி.ச.புவனேஸ்வரி மற்றும் மாவட்ட கரூவூல அலுவலர் திரு.சீ.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன் உள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்  முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராண்டு மாஸ்டர் இயந்திரம் மூலம் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

வேலூரில் பாரதப்பிரதமரின் 15 அம்ச திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்...

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சாபில் பாரதப்பிரதமரின் 15 அம்ச திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலர் செல்வி.செ.பூர்ணிமா, கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் திரு.ராஜ்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.  

ஸ்ரீ நாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி.

Image
    வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் ஆசியுடன் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில்  29 மாணவர்கள் 31 மாணவிகள் என மொத்தம் 60 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய 60 பேரும் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகளாக 100 சதவிகித தேர்ச்சியை பதினொன்றாம் வகுப்பில் இப்பள்ளி பெற்றுள்ளது. நிஷா.பா என்ற மாணவி 551 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுகந்த்.ச என்ற மாணவன் 505 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், அபிநயா.ம என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் முனைவர்  மீ. சுரேஷ்பாபு, முதன்மை முதல்வர் திரு  சீ. முரளிதர் மற்றும் முதல்வர் பாலமுருகன் ஆகியோர் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.

அள்ளித்தர வரும் அஷ்ட லட்சுமியே...

Image
அலைமகளை வரவேற்போம்!! பாற்கடலில் அமுதம் கடைந்த போது அவதரித்தவர் அன்னை மகாலட்சுமி! பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன், மகாலட்சுமியை, திருமகளை தன் மனைவியாக்கிக் கொண்டார் அஷ்டலட்சுமிகளும் ஒரே ரூபமாய் அருள்புரிய காத்திருக்கிறார் அன்னை மகாலட்சுமி அவர் எங்கும் இருக்கிறார் சர்வம் விஷ்ணு ஜெகத் மையம் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பது அழகிய நம்மாழ்வார் பாசுரம் ! மகாலட்சுமி, ஒருபோதும் விட்டுவிலகாமல். உறைகின்ற மார்பை உடையவன் திருமால்! ஸ்ரீ ஆன திருமகள் உறைவதால் ஸ்ரீநிவாசன் ஸ்ரீயபதிஆகிறான்! வரம் தர காத்திருக்கிறார் வரலட்சுமி ! வரம்  தர ,தேடி வரும் லட்சுமியை ,வரவேற்க நாம் தயாராக வேண்டாமா? அதிர்ஷ்ட தேவதை வருகிறபோது கதவுகளை சாத்தி கொண்டிருந்தால், இழப்பு நமக்கு அல்லவா? அள்ளித்தர வரும் அஷ்ட லட்சுமியே! அதிர்ஷ்ட லட்சுமியே! எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக! இன்னல்கள் யாவும் துடைத்து எறிய ,எங்கள் எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக! கல்யாண யோகமும் மாங்கல்ய பலமும் அருள, எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக!! அம்மா ! லட்சுமியின் அருளும் இல்லாமல் ,உன் பதியின் அருளும் இல்லாமல் ,பரிதவிக்கும் ...

ஒவ்வொரு ஆண்டும்  சிறப்பு சான்றிதழ் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம் சமூகப் போராளி, சமூக முன்னேற்றத்தின்  ஊன்றுகோல், தன்னார்வலர், எழுத்தாளர், கல்வியாளர், தமிழ் ஆர்வலர் எனும்  பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் 134வது பிறந்த தினம்!  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த காலத்தில் பழைய பஞ்சாங்கத்தினை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி/தந்தையின் ஊக்கமிருக்க/ உள்ளூர் கல்லூரியில் பெண்களை சேர்க்காத காரணத்தினால் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர தைரியமாக விண்ணப்பித்த 30.07.1886 ல் பிறந்த  டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினம்! வழக்கறிஞர் நாராயணசாமி/ பாடகி சந்திரம்மாளின் மூத்த மகளாக, இசை வேளாளர் சமூகம் சார்ந்த, சந்திராம்மாள்/நல்லமுத்து எனும் இரு தங்கைகளோடு, இராமையா எனும் தம்பியோடு அறிவு ஜீவியாகப் பிறந்தவர்! கல்லூரிப் படிப்பிற்கு  அன்றைய சமஸ்தான ஆட்சியிலிருந்த பழமைவாதி அதிகாரிகள் எதிர்ப்பு! பெண் கல்வியில் பெரும் ஆர்வம்/ முற்போக்கு சிந்தனைவாதியான மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அதிகாரிகளின் எதிர்ப்புகளை தூக்கி எறிந்து/கல்லூ...

ஊரடங்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள்...

Image

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு...

Image
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின், முதலமைச்சர் அறிவிப்பு ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு. தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு. திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி. பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு.  

வாழ்க்கை முழுவதும் ,நந்தவனத்தில்....

Image
நண்பா! நண்பா! நல்ல நட்பு இருந்தால் ,வாழ்க்கை முழுவதும் ,நந்தவனத்தில் இருப்பது போல் மகிழ்ந்து மணக்கலாம்! நன்மைகள் செய்து, நலம் பெற, துணைவரும் நட்புமட்டும் அமைந்து விட்டால் துயரங்களை எளிதாய் கடக்கலாம்! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத நட்பு மட்டும் கிடைத்துவிட்டால் நினைப்பது எல்லாம் ஜெயிக்கலாம்! கவலையில் கைகொடுக்கும் தூயதோர் நட்பு உடன் இருந்துவிட்டால், வான வீதியில் நடந்து வரலாம்! அன்பை விதைத்து ,அல்லல் புதைத்து,ஆறுதல் தருகிற நட்பு மட்டும் பக்கம் நின்று விட்டால் வெற்றிகளையே வாங்கி வரலாம்! மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் என்றார் கவிஞர் வாலி! இருக்கும் நண்பர்கள், இனிமைகள் வளர்க்கும் பணியில் சிறந்தால்,  நம் இதய வலிகள் எங்கோ பறந்துஓடும்! தட்டிக்கொடுக்கும் நட்பு மட்டும் தொடர்ந்து வந்தால் போதும், தோல்விகளை எட்டி உதைத்து, வெற்றிக் கனிகளை பறித்து உள்ளம் பாடும்! பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனை போல பாரி கபிலர் போல ,இரும்பொறையை போல நட்பு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது லாபம் இல்லை! அன்பாய் விசாரித்துஆர்வமாய் ஓடிவந்து, உடன் இருக்கும் உயர் நட்பு இப்போதைக்கு போதும்! இன்று நட்பு, பல நேரங்களில் காணல...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி.

Image
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,107 ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

ஆற்காடு பஜார் பகுதியில் வட்டாச்சியர் காமாட்சி அதிரடி ஆய்வு.

Image
ஆற்காடு பஜார் பகுதியில் வட்டாச்சியர் காமாட்சி அதிரடி ஆய்வு. ஆற்காடு பஜார் பகுதியில் சமூக இடைவெளி, முககவசம் அணியாத  வணிகர்கள் பொதுமக்கள் ஆகியோரை எச்சரித்து ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.

Image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி தகவல்!!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்குள் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 200 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்காக பரிசோதனைகள் அதிகப்படுத்தி உள்ளோம். இந்த மாதத்தில் பரிசோதனைகள் இரட்டிப்பாக செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பு தெரியாமல் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக வெளியே சுற்றித்திரிகின்றனர். இதனால் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாகிறது. கடந்த வாரம் நெமிலியில் ...

வேலூ­ரில் போக்­கு­வ­ரத்து போலீ­சா­ருக்கு முகக் கவ­சம், சானி­டை­சர்...

Image
வேலூரில் பிரசிடென் சி ரோட்டரி சங்கம் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி. எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமை தாங்கி னார். போக்குவரத்து ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க. வேலூர்மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, போலீசாருக்கு முககவசம் மற்றும் சானிடைசரை வழங்கினார்.நிக ழ்ச்சியில் பிரசிடென்சி ரோட்டரி தலைவர் சதீஷ், செயலாளர் முருகன் ராஜசேகர், ரமேஷ்,முன்னாள் தலைவர் கள் வெங்கடேஷ், சண்முகம், வேலு, பிரேம், விஜயகுமார், செல்வம், ராஜேஷ், மற்றும் டில்லி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

அதற்கு பசியா...இல்லை, அதன் ஜோடியை காண வேண்டுமென்கிறஆர்வமா.

Image
பாடம் சொல்லும் படம்!! களத்தில் கம்பீரமாக செல்லும் ஆண் யானையைப் போல் தண்ணீர் குளம் நாடிச்செல்லும்    களிறு!! ஏன் அத்தனை வேகமாக நடக்கிறது! அதற்கு பசியா? இல்லை, அதன் ஜோடியை காண வேண்டுமென்கிறஆர்வமா? எதுவுமே இல்லை! இப்போது யானையின் தும்பிக்கையை ஒரு முறை உற்று நோக்குங்கள்! சிங்கக்குட்டி ஒன்று இருக்கிறதா? ஆமாம்! அதனால் நடக்க முடியவில்லையாம்! வெம்மை வாட்டும் பயங்கர காடு! தண்ணீர் தாகம் வேறு அந்த குட்டிக்கு! அதைப் பார்த்து கலக்கம் அடைய வேண்டியது அந்த குட்டியின் தாயே ! ஆனால் இங்கே தவித்து துடித்து ,அந்த சிங்கக் குட்டியை, நடக்கமுடியாத ,தாகத்தால் தவித்த, வெப்பத்தில் சுருண்டு போன அந்த சிங்கக் குட்டியை ,தன் துதிக்கையில் தூக்கிக் கொண்டு ,தனக்கு பரிச்சயமான நீர் நிறைந்த நீர்நிலை நாடிச் சொல்கிறது அந்த கம்பீரமான ஆண் யானை! என்ன கருணை ! காருண்யம் !எத்தனைஇனிய கண்ணோட்டம் ! எத்தனை கனிவு! எத்தனை ஆர்வம்! எத்தனை பகைமை மறந்த உறவு!மனிதா ! நீ கற்றுக்கொள்ள வேண்டும் ! இது வெறும் படமல்ல !மானுடச் சமுதாயத்திற்கு ஒரு பாடம்! அன்பில்லாமல் ,அரவனைக்கும் பண்பு இல்லாமல் ,நியாயம் இல்லாமல் ,நன்றி விசுவாசம் இல்லாமல் ,உதவ...

ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம்.

Image
வேலூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில், வேலூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வரும் வேலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான திரு. சீ முரளீதர் தலைமை தாங்கினார்.  பள்ளி முதல்வர் திருமதி இந்துமதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் திருமதி ஆற்றலரசி முன்னிலை வகித்தார்.  ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குனர் முனைவர் மீ சுரேஷ்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ‍ உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆதிகாலம் முதலே மனிதன் வாழ்க்கையானது இயற்கையை சார்ந்தே உள்ளது. காடுகளுக்கு நடுவில் இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலைமாறி தற்போது இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி நகரங்களில் பல்வேறு மக்களுக்கிடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இயற்கை வளங்கள் மீத...

ஆதரவின்றி தவித்த பெண்மணிக்கு நலத்திட்ட உதவிகள்...மாவட்ட ஆட்சித்தலைவர்.

Image
வேலூர் மாவட்டம் அலமேலுரங்கபுறம் நெடுஞ்சாலைசாலை ஓரம் வீடு இடிந்த நிலையில் ஆதரவின்றி தவித்த காவியா என்ற 1௦ வயது மகளுடன் தவித்த கணவனை இழந்த பெண்மணி திருமதி கலைவாணிக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர்கிளை சார்பில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப. அவர்கள் ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்கள், சமயல் பாத்திரங்கள், உடைகள், பெட்ஷீட்கள், கம்பளிபோர்வைகள், உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.1௦௦௦ மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினையும் வழங்கி மாற்று இடத்தில் பட்டா வழங்கி பசுமை வீடு கட்டித்தர அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார்கள். உடன் இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை செயலாளர் திரு.இந்தர்நாத், வட்டாட்சியர் திரு.ரமேஷ் உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு 500 பேருக்கு கபசுர குடிநீர்.

Image
Ward 17, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு நண்பர்கள் டிரஸ்ட் மூலம் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் சுமார் 500 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் உடனிருந்தனர் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி.

புலி நமது அடையாள சின்னமும் ஆகும் - கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
இன்று ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்! காடுகளை பராமரிக்காமல் புலிகளை பராமரிக்க வாய்ப்பே இல்லை! அது தவிர்க்கப்பட வேண்டும்!! காடுகளை அழிப்பவர்கள் வன விலங்குகளையும் அழித்து வரும் கொடுமைகள் தொடர்கின்றன! முற்றிலும் அது தடுக்கப்படவேண்டும்!திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! புலி நமது அடையாள சின்னமும் ஆகும் ஆகும்! இதனை மனதில் வைப்போம்! கம்பீரமான புலிகளை காத்திருப்போம்! - கவிஞர் ச.இலக்குமிபதி.

ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கட்டியவர் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
பி.சா. சுப்ரமண்ய சாஸ்திரி பிறந்த தினம் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்த, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞர் பி.சா.சுப்ரமண்ய சாஸ்திரியின் ஜூலை 29 ன் திகதிய பிறந்த தினம்! கொல்லி மலைப்பகுதி பாலகிருஷ்ணப்பட்டியில்  புரோகிதர் பணியாற்றும் தந்தை சிறப்புற 29.07.1890 ல் பிறப்பு ! நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு! பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பு! இலக்கணம்/தத்துவ  சாஸ்திரங்களில் நிபுணரான நீலகண்ட சாஸ்திரியிடம் சமஸ்கிருதம் பயிலல்! அம்மொழியில் M.A.பட்டம் பெற்றார்! ச.குப்புசாமி சாஸ்திரியிடம் அலங்கார சாஸ்திரங்களையும், காசி இந்து பல்கலைக்கழக பேராசிரியர் சின்னசாமியிடம் மீமாம்சமும் பயின்றவர்! பணிகள்..... பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியர் பணி! திருவையாறு அரசர்  கல்லூரியில் முதல்வர் பணி! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத துறை தலைவராக பணி! வித்தியா ரத்தினம் வித்தியா நிதி வித்யா பூஷணம் பெயர்களில் பட்டங்களானது! மகா மகிமோ பாத்தியாய பட்டத்தினை சாகித்ய அகாடமி சூட்டி பெருமிதப்பட்டது! ஆய்வு..... 1930 ல் சென்னை ...

அன்பென்ற ஒரு எழுதுகோலால் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
அன்பின் வழியது சைவக்குரவர் நால்வர் சித்தமெல்லாம் சிவமயமானது வசியமான அன்பு! இறைவனுக்கு தன் கண்ணை அப்பியது திண்ணப்பனின் திவ்யமான அன்பு! மறுபிறப்பிலும் மறவாதமனம் கேட்டது காரைக்காலம்மை பக்தியான அன்பு! 63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள் நெக்குருகியது சரணாகதியான அன்பு! செம்புலப்பெயல் நீரென நெஞ்சமானது குறுந்தொகை கண்ட காதலான அன்பு! உலக உயிர்கள் உய்ய மும்மாரி கேட்டது ஆண்டாளின் பரோபகரமான அன்பு! தனி மனிதனுக்கு உணவு மறுக்க /ஜகம் அழிவு பாரதியின் சூளுரையான அன்பு! வாடிய பயிரைக் கண்டு வாடியது வள்ளலாரின் வாஞ்சையான அன்பு! முல்லைக்கு தேர்/ஔவைக்கு கனி கடையேழுவள்ளலின் ஈகையான அன்பு! மானிணைவு கலையாமல் தேரோட்டும் கட்டளை அகநானூறின் விழும அன்பு! 100 புரிதல்/1000 போராட்டங்கள், ஒற்றை நம்பிக்கை/பல பேராசையோடு முகங்கள்/முகவரி தேவைப்படாத, அருகிலிருக்க உயிரது இயங்கி, தொலைவு காண என்புதோல் உடலாகி, இன்பம் மட்டும் கூட்டி/இதய ராகம் மீட்டும் அன்பென்ற ஒரு எழுதுகோலால் வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்க முனைந்திடுவோம்! அன்பின் வழி கண்டு அதன் வழி நடக்கும் உத்வேகத்துடன்.... முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி, முதுகலை ஆசிரியை, அ.ம.மேனிலைப்பள்ளி, வா...

துல்கர் சல்மான் பாடிய பாடல் வீடியோ வெளியானது.

Image
மணியா ரயிலே அசோகன்" படத்தின் உன்னிமயா என்ற பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது. "மணியா ரயிலே அசோகன்"  படத்தின் உன்னிமயா என்ற பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது. இப்பாடலை நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு...

Image
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 6 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தகவல்

ஊரடங்கு நீட்டிப்பா... மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

Image
ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், பொதுப் போக்குவரத்து தடையை நீக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும்...

Image
  தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ.  சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010ம் ஆண்டு அறிவிப்பாணை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது.  கடந்த மார்ச் மாதம், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி முழு பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...

Image
நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பபடும். நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு.

இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள்...

Image
பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள் .இந்திய வான் எல்லைக்குள் ரஃபேல் விமானங்கள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன .5 ரஃபேல் விமானங்களை இந்திய சுகோய் விமானங்கள் எதிர்கொண்டு அழைத்து வருகின்றன. ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலை ரஃபேல் விமானங்கள் தொடர்பு கொண்டன .சற்று நேரத்தில் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவில் தரையிறங்க உள்ளன .கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்குகின்றனர்.

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது...மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி.

Image
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு #SupremeCourt கேள்வி மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் 4,000 பேருக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தக்கோரி வழக்கு நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை.

கொரோனா பாதித்த பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு...

Image
"கொரோனா பாதித்த பகுதிகளான ஓச்சேரி, ஆயர்பாடி, அத்திப்பட்டு, காவேரிப்பாக்கம், ராளச்சேரி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு! ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகளான ஓச்சேரி, ஆயர்பாடி, அத்திப்பட்டு, காவேரிப்பாக்கம், ராளச்சேரி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைதொடர்ந்து ஓச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் புதிதாக சிறப்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெமிலி தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிச்சம், வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்வேதா, நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரம்...

Image
வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு  எந்திரங்களை அனைத்து கட்சி உறுப்பினர்கள் முன்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் வருவாய் அலுவலர் பார்த்திபன், துணை ஆட்சியர் பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர்.

கொரனோ தடுப்பு சிறப்பு அதிகாரி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு...

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மாநில கண்காணிப்புக் குழு அதிகாரி (Monitoring Officer) லஷ்மிபிரியா, இ. ஆ. ப., கூடுதல் ஆணையர் (வணிகவரி) மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்ஷினி அவர்கள் ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மருத்துவ குழுவினர் உடன் ஆலோசனை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம்   விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு சுகாதார மருத்துவமனையையும்,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளையும்  மற்றும் மகாலட்சுமி கல்லூரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள Covid Care Center(ccc) அமைந்துள்ள   விடுதிகளையும், Covid -19 தொற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் மையம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள  மாநில கண்காணிப்பு குழு அதிகாரி (M...

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி நற்பணி மன்றத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

Image
இன்று 37 வது பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி , இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் நற்பணி மன்றத்தின் சார்பாக இரத்தினகிரி கோவில் அருகில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 150 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட  மளிகை பொருட்களும் , 300 பேருக்கு மதிய உணவும், 1500 நபர்களுக்கு முக கவசங்களும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் / கல்வி உபகரணங்கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் இரத்தினகிரி காவல்துறை ஆய்வாளர்கள் உதவியுடன் வேலூர் மாவட்ட தனுஷ் நற்பணி மன்றத்தின் தலைவர்.  தனசேகர், செயலாளர் விஜயசாரதி,  பொருளாளர். ஹரீஷ்  ஆகியோரின் முன்னிலையில் இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் தினேஷ் குமார் , வீரா தனுஷ் , அஜய் ஆகியோரின்  ஏற்பாட்டில்  இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்ற  உறுப்பினர்களுடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொரோனா  நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்...

மரம்....அழகான இயற்கை வளம் - பெ.தமிழ்ச்செல்வி.

Image
உலக இயற்கைவளம்  பாதுகாப்பு தினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு  சங்கம் 1948 ல் துவங்கியது! உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது! இயற்கையை பாதுகாக்க... இயற்கை நம்மை பாதுகாக்கும் என்ற நோக்கில்  இத்திகதி கொண்டாட்டம்! இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப் பட்டவை! வாழ்விற்கு அத்தியாவசியமானவை! தேவைக்கு பயன்படக்கூடியவை! மனிதனுக்குப் பயன்படும் இயற்கையில் கிடைக்கும் கூறுகள் இயற்கை வளங்கள் ஆகும்! உயிருள்ள இயற்கை வளங்கள் உயிர்க்கோளத்திலிருந்து வருவிக்கப்படுபவை..... விலங்குகள்/காடுகள்/காடு சார்ந்த பொருட்கள் இதில் அடங்கும்! உயிரற்றவை நீர்/நிலம்/வளியிலிருந்து வருவிக்க ப்படுதல்! புதுப்பிக்கக் கூடியவை.... காற்று/நீர்/சூரிய ஒளி/காட்டு வளம்! புதுப்பிக்க முடியாதவை.... ஃபாசில் எரிபொருள்/தாது பொருட்கள்! இயற்கை வளங்கள்..... நீர்/காற்று/செடிகள்/பூக்கள் வனவியல்/விவசாயக் காடுகள் காட்டு உலகம் விலங்குகள் தாவரங்களின் வகைகள் மண் வகைகள் நீர்/கடல்/ஏரி/ஆறு இயற்கை வளமுகாமைத்துவம் நிலங்களை கையாளும் முறை இதில் அடங்கும்! இயற்...

புதிய CMC வளாகத்தில் ரூபாய் ஒரு கோடி செலவில் பிராணவாயு உற்பத்தி ஆலை.

Image
இராணிப்பேட்டை கண்ணனிகபுரத்திலுள்ள புதிய CMC வளாகத்தில் ரூபாய் ஒரு கோடி செலவில் பிராணவாயு உற்பத்தி ஆலை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. விபத்தில்  ஈடுபட்டு படுகாயம் அடையும் நோயாளிகளிக்கென்ரே இந்த மருத்துவ வளாகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் இந்த வளாகத்தின் ஒரு பகுதி கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறந்த வகையில் சிகிச்சை அளிக்க இந்த ஆலையை பொருத்தும்  பணி மிக வேகமாக, போர்கால அடிப்படையில் எமது பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய காலகட்டத்திற்கு பிறகும் இந்த ஆலை தொடர்ந்து இந்த வளாகத்தில் அமையவிருக்கும் மருத்துவமனைக்கு பயன்படும். நம்மை சுற்றியுள்ள இயற்கை காற்றில் 21 % பிராணவாயு உள்ளது. இதுவே பொதுவாக மனிதனுக்கு போதுமானது. இருப்பினும் சிலருக்கு சுவாச கோளாறு இருந்தால், அதிக அளவில் பிராணவாயு அவசியம் ஏற்படுகிறது. கோவிட் 19 நோயாளிகளின் இரத்தத்தில் போதிய அளவு பிராணவாயு இல்லாததால், அவர்களுக்கு சுவாச பிரச்னை எட்டப்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவேதான் கோவிட் 19 நோயா...

மலையாளம் பள்ளியில் கற்பித்த சூழலில் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் 27.07.1876 ல்  சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதிகளுக்கு  இரு பெண் குழந்தைகளுக்கு அடுத்து மகனாகப் பிறக்க வணங்கும் கடவுள் தேசிக விநாயகர் பெயர் வைக்கப்பட்டவர்! புகழ் பெற்ற கவிஞர்! பக்திப் பாடல்கள் இலக்கியப் பாடல்கள் வரலாற்று நோக்குடைய கவிதைகள் குழந்தைப் பாடல்கள் வாழ்வியல் போராட்ட கவிதைகள் இயற்கைப் பாடல்கள் தேசியப் பாடல்கள் வாழ்த்துப் பாக்கள் கையறு நிலைக் கவிதைகள் பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்! 9 வயதில் தந்தை இழப்பு, M.A.படிப்பு, ஆசிரியர் பயிற்சி, படித்த பள்ளியிலேயே ஆசிரியப்பணி, 24 வயதில் உமையம்மையுடன் திருமணம்! தாயி என மனைவியை  மரியாதை தொனிக்க அழைத்தல்! குழந்தைப் பேறில்லாமல் போக அக்காள் மகன் சிவதாணுவை சுவீகாரம் செய்தல் என வாழ்வியல் நிகழ்வு கண்டவர்! குழந்தை கவிஞர் தமிழில் குழந்தைகளுக்காக 1938 ல் 25 பாடல்களை எழுதி மலரும் மாலையும் தொகுதியில் வெளியீடு செய்தவர்! "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு ஆங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்றது வெள்ளை பசு உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்...

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 48 பேர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்பு....

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 வேதியியல் கணக்கு அறிவியல் புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில் மொத்தம் 46 பேர் தேர்வு எழுத உள்ளனர் கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்விசாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ஒருவர் வீதம் 3 மாணவிகள் 2 மாணவர்கள் மற்றும் 5 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர் இதுதவிர 43 தனித்தேர்வர்களுக்கு 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன காலை 10 மணிக்கு தேர்வு எழுதி தொடங்கியது இந்த தேர்வு பணியில் 120 ஆசிரியர்கள் ஈடுபட்டனர் முறைகேடுகள் எதுவும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....

ராணிப்பேட்டையில் கருப்பு  கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

Image
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு வட்டத் தலைவர் நிலவு குப்புசாமி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் எல் சி மணி மற்றும் ரமேஷ் வேணு துரை பழனி ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு அவசர சட்டங்களை கைவிடவேண்டும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி கொடுத்தல் சட்டத்தை திரும்பப் பெறுதல் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் தேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் 40 மடங்கு உயர்த்திய நில அளவை கட்டணத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...