மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (29-04-2020) சென்னை தலைமை செயலகத் திலிருந்து காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுத்திட எடுக்கப்பட்டுவரும் தொடர் தீவிர நடவடிக்கைப்பணிகள் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகளின்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அனைத்து
அரசுஅலுவலர்கள்,காவல்துறையினர், பொறுப்புஅலுவலர்கள், தன்னார் வலர்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குபவர்கள் உட்பட அனைவரும் நாளை (30-04-2020) முதல் நடைபெறும் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொள்வது மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் மகளிர் திட்ட இயக்குநர் திரு.சிவராமன், உள்ளனர்.
Comments
Post a Comment