தொழிலாளர் தின வாழ்த்துகளோடு..... முனைவர். பெ.தமிழ்ச்செல்வி.
தொழிலாளர் தினம் 01.05.2020.
உழவன் கலப்பை நிலம் காண
நெல்மணி களத்தினில்!
முத்துக்குளிப்போன் ஆழ்கடல்
போக முத்துமணி கழுத்தினில்!
ஆசிரியன் வகுப்பறை களம் காண
அறிவுமணி மாணவனிடம்!
தொண்டும் தானமும் இதயம் வர
கண்மணி குருடன் கண்ணில்!
எறும்பின் தொழிலோ
மழைக்கால சேமிப்பு!
வேரின் தொழிலில்
மரமொன்றின் செழிப்பு!
மருத்துவப் பணியில்
யமன் வரவு ஒத்திவைப்பு!
பொறியாளர் பணியில்
கட்டிடங்களின் முத்தாய்ப்பு!
அரசின் தொண்டில்
குடிமக்கள் வளமை!
குடிமக்கள் தொண்டில்
தேசத்தின் செழுமை!
சூரியோதயம் இல்லையெனில்
பயிருக்கு உயிர்ப்பில்லை!
நிலவு நேரத்திற்கு வராவிடில்
புலர்வுக்கு வாய்ப்பில்லை!
துப்புரவு காணாவிடில்
தூய்மைக்கு வழியில்லை!
நெருப்பின் பணி காணாவிடில் .
உண்டிக்கு உணவில்லை!
காற்று ஸ்பரிசம் தராவிடில்
உள்...வெளி சுவாசமில்லை!
மானுடமே!நினைவு கொள்!
தொழிலொன்று இல்லையெனில்
உலகமாகிடும் சூன்ய வாழிடமாய்!
தொழிலாளர் தின
வாழ்த்துகளோடு.....
முனைவர். பெ.தமிழ்ச்செல்வி
எண்.45.சௌகார் தெரு,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment