முக்கியசெய்தி. தமிழகம் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கானொலி மூலமாக முதல்வர் ஆலோசனை...
தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கானொலி காட்சி மூலமாக ஆலோசனை....
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்
காய்கறிக் கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படுவதில்லை.இதனை உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்
எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்.
முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3ஆக பிரித்து பணி வழங்க வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம்
கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்
கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்
வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விலைப்பொருட்கள் கொண்டுசெல்வதை யாரும் தடுக்கக் கூடாது.என தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கானொலி காாட்சி மூலமாக அறிவுறித்தியுள்ளார்.
Comments
Post a Comment