Posts

Showing posts from April, 2020

 தொழிலாளர் தின  வாழ்த்துகளோடு.....   முனைவர். பெ.தமிழ்ச்செல்வி.

Image
 தொழிலாளர் தினம் 01.05.2020.                                                       உழவன்  கலப்பை நிலம் காண         நெல்மணி களத்தினில்! முத்துக்குளிப்போன் ஆழ்கடல்       போக முத்துமணி கழுத்தினில்! ஆசிரியன் வகுப்பறை களம் காண          அறிவுமணி மாணவனிடம்! தொண்டும் தானமும் இதயம் வர     கண்மணி குருடன் கண்ணில்! எறும்பின் தொழிலோ        மழைக்கால சேமிப்பு! வேரின் தொழிலில்        மரமொன்றின் செழிப்பு! மருத்துவப் பணியில்        யமன் வரவு ஒத்திவைப்பு!        பொறியாளர் பணியில்     கட்டிடங்களின் முத்தாய்ப்பு!                                                       ...

பிரதமரின் மருத்துவ  காப்பீட்டு திட்டம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

Image
ஆயுஷ்மான் பாரத் (பிரதமரின் மருத்துவ  காப்பீட்டு திட்டம்) வண்டிக்கு அச்சாணி ! கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ! கப்பலுக்கு கலங்கரை விளக்கம்! மனிதனின் நிம்மதி/ மகிழ்ச்சிக்கு உடல்நலனே! உடல்நலனிற்கு உதவியே.. பிரதமரின் மருத்துவ  காப்பீட்டு திட்டம்! இன்றைய தலைமுறையின் உயிர் காக்கும் படலங்கள்..   *உடல் இளைக்க ..டயட்.   *உடல் உறுதிக்கு...எக்சர்சைஸ்.   *மாதமிரு முறை....சுகர்                           & BPஆய்வு.   * 6 மாதமொரு முறை...முழு                உடல் பரிசோதனை. மனிதன் பின்னால் ஓடும் திட்டங்களோடு மருத்துவமிருக்க, கண் நோயிற்கு     மருத்தவமனை போக, கணுக்காலில் இருந்து கழுத்து வரை , கண்டுபிடிக்கப் பட்ட எல்லா இயந்திர சோதனையும் கணக்கில்லாமல் கையிருப்பைக் கரைக்கும் மருத்துவரும்இருக்க அஞ்சாதே என காட்டும் அபயக் கரமே... ஆயுஷ்மான் பாரத்! 25.11.2019 ..ல்  பாரதப் பிரதமர் தொடங்கி இந்தியா முழுவதும் மக்கள் தேக நலம்  காக்கும் தேச நலனாய் உலா வருகிறது ! இ...

 வாட்டம் போக்க வருக... வடிவுடை அம்மா வருக ... 38-ஆம் நாள் யுத்தம் -கவிஞர் ச.இலக்குமிபதி.

Image
38-ஆம் நாள் யுத்தம்   வாட்டம் போக்க வருக! வடிவுடை அம்மா வருக!! பூமியிலே ஆதியிலே தோன்றிய முதல் சிவ ஸ்தலம் இதுவாகும்! படைப்புக் கடவுள் பிரம்மாவும் காக்கும் கடவுள் திருமாலும் இவ்வாலயம் வந்து நினைத்ததை முடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடம் திரும்பி இருக்கிறார்கள்! இருபத்தேழு நட்சத்திரங்களும் வந்து தொழுது இங்கே சிவலிங்க ரூபத்தில் காட்சி கொடுக்கும் பேறு பெற்றிருக்கிறார்கள்! தேவார மூவர்கள் இவ்வூர் ஆலய ஈசன் புகழ்பாடி பதிகங்கள் பல அருளி பரமானந்தம் அடைந்திருக்கிறார்கள்! சங்கீத மும்மூர்த்திகளில் முத்துசாமி தீட்சிதர் வந்திருக்கிறார்! தியாகராஜசுவாமி வந்து அம்மன் மீது கீர்த்தனைகள் பாடி மகிழ்ந்திருக்கிறார்! பட்டினத்தார் இங்கு வந்து ஒரு தனி கரும்புடன் ஒரு வரமும் பெற்று யாத்திரை தொடங்கி இருக்கிறார்! நிறைவில் சுவாமி சன்னிதி எதிரில் முக்தி பெற்று சமாதி ஆகி இருக்கிறார்! சென்னையில் வாழ்ந்திருந்த காலம் வரை வள்ளலார் இவ்வாலயம் வந்து தரிசனம் செய்து பரமசுகத்தில் தன்னை மறந்து இருக்கிறார்! அம்மன் அருள் கிடைக்கப்பெற்று இந்த மண்ணில் மகான் தோப்பா சாமியும் வாழ்ந்திருக்கிறார்! கலியநாயனார் ஒற்றியூர் கோவிலில் த...

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் தவில் (ம)நாதஸ்வரம் குடும்பத்தினர் க்கு மளிகை பொருட்கள் வழங்கினார்

Image
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் இவர்களது குடும்பம் நலிவுற்று இருப்பதினால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 121 பேர் தவில் மற்றும் நாதஸ்வரர்க்கு  ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் வழக்கிய போது எடுத்த படம். 

வெங்கடேஸ்வரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரத்த தானம் முகாம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Image
வேலூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற ரத்த தான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி சங்கத்தினர் இரத்த தானம். வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரத்ததான முகாம் பாரத சாரண சாரணியர் ஜூனியர் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100 பேர் இன்று வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்த தானம் செய்தனர். *இந்த நிகழ்வினை வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார்.*    *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.*   மாவட்ட சாரண இயக்கத்தின் அமைப்பு ஆணையர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் பி குமார், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சாரண இயக்க மாவட்டச் செயலாளர...

வேலூர் சிசு பவன் மாற்றுத் திறனாளிக்கு உபகரணங்கள். மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள சிசு பவனில் தங்கியுள்ள செவித்திறன் ,பேச்சுத் திறன் குறைபாடுடைய 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படமால் பாதுகாத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்மு கசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் சத்தான உணவு பொருட்கள் கையுறைகள், முககவசங்கள், கைகளை கழுவ கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள். உடன் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் திரு.பாபு உள்ளார்.  

நரிக்குறவர் இன குடும்பத்தினர்க்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நிவாரண உதவி. மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Image
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தில் தங்கியுள்ள 35 நரிகுறவர் இன குடும் பங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வீட்டு உபயோகத்திற்கான   நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க வேலூர் கிளை செயலாளர் திரு. இந்தர்நாத், தலைவர் திருமதி.பர்வதா, பொருளாளர் திரு.பாஸ்கரன் உள்ளனர்.  

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு கபசுரக்குடிநீர் ..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் மூலிகை பாக்கெட்டுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட சித்த மருத்தவ அலுவலர் ப.சுசி கண்ணம்மா உள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளர் மகன் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்...

Image
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்கள் தன் தந்தை தாங்கள் பள்ளிக்கு செல்லும்போது கைசெலவுக்கு தினமும் தரும் 5 ரூபாயை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர். கொரோனா நிவாரண நிதிக்கு பல மாணவர்கள் பணம் வழங்கும் செய்தியை கேள்விபட்டு தற்போது உண்டியலில் சேர்ந்துள்ள மொத்த பணம் ரூ. 4 ஆயிரத்து 727--ஐ  கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.

ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் பாலாஜி லோகநாதன் கப சுர குடிநீர் வழங்கினார்.

Image
வாலாஜா, அம்மா உணவகம் தன்னார்வலர் பணி, Dr. லோகேஸ்வரன், கப சுர குடிநீர் வழங்கினார். ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் திரு. பாலாஜி லோகநாதன் ஏற்பாட்டின் படி, வாலாஜா நகரில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்க பட்டது. நகராட்சி ஆணையாளர், திரு. A. G. சந்திரமோஹன், திரு T. K. குமார், திரு. W. G. முரளி, திரு. தங்கதுரை பங்கேற்றனர். குமரன் ரவிசங்கர்  M. A.,, (167 முறை இரத்த தானம் செய்தவர் ). ஓம் சாய்ராம்.

ராணிப்பேட்டை: RAC  சார்பில் 30 பேருக்கும் மேலாகவும்  ரத்த தானம் செய்தனர்.

Image
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் RAC  சார்பில் 30 பேருக்கும் மேலாகவும்  ரத்த தானம் செய்தனர் வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு ரத்தம் வங்கியில் தற்போது ரத்த இருப்பு குறைவாக உள்ளதால் தகவல் தெரியவர பல சமுக தொண்டுடாற்றிவரும்  ராணிப்பேட்டை அதில்டிக் கிளப் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்த வங்கிக்கு  ரத்த தானம் செய்தனர்  இதைக்கண்டு இந்தப் பகுதி மக்கள் பாராட்டினர் ரத்தம் கொடுத்து அவர்களுக்கு மருத்துவமனை சார்பாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது அவர்களுக்கு பழச்சாறு கொடுக்கப்பட்டது தேவை அறிந்து ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள் மருத்துவ நிர்வாகம்  பாராட்டினர் இன் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் RAC நிர்வாகிகள் ஜே.சி.பாலமுருகன்,ரஃபி மணிகண்டன் மல்லிஷ்வரன் உதவும் பறவைகள் குமார் வாலாஜா பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் குமரேசன்.திரலான RAC  உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்த வங்கிக்கு ரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

ராணிப்பேட்டை: அரசு துறை பணியில் உள்ள ஊழியர்களுக்கு மத்திய உணவு.

Image
கொரோனா பாதிப்பால் பணிச்சுமையால்  உள்ள அரசு துறை பணியில் உள்ள ஊழியர்களுக்கு மத்திய உணவு   அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பாராளூமன்ற உறுப்பினர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் கலவை பேரூராட்சியில் துப்புரவு ஊழியர்கள்  மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு மத்திய அசைவ உணவு பரிமாறப்பட்டது இதில் சமூக இடைவெளியுடன் பந்தி பரிமாறப்பட்டது இதில் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை மாவட்ட நிதி செயலாளர் தலைமையில் ஆசிரியர் சந்திரன், வட்ட செயலாளர் தீர்த்தமலை பொருளாளர் ஜெகன் துணை தலைவர் வெங்கட்ராமன் ஆசிரியர் ராஜ்குமார் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் தலைமையாசிரியை சுந்தரி ஆசிரியை செல்வி ரமேஷ் ஆசிரியர் சிவசங்கரன் பெல்பாலாஜி பெல்விமல்குமார் கன்னியப்பன் ஆகியோர் குழுவாக இணைந்து கொரோனா பாதிப்பால் பணிச்சுமையால்  உள்ள அரசு துறை பணியில் உள்ள ஊராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

ஊரடங்கால் கலங்கி நின்ற மக்கள் உடனே களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்.

Image
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த சொர்க்கால் பேட்டை பகுதியில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய இணை செயலாளர் முரளி தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி இளைஞரணி செயலாளர் கோபி முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் வேலூர் மாநகர து.செயலாளர் சரவணன், 2வது மண்டல துணை செயலாளர் பாலமணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்

வேலூரில் தா.மா.கா.சார்பில் மளிகை பொருட்கள் வழங்கி உதவி...

Image
இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மக்கள் தலைவர் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கு தமிழ்மாநில காங்கிரஸ் வேலூர் மத்திய மாவட்ட தலைவர் அண்ணன் திரு பி எஸ் பழனி அவர்கள் முதற்கட்டமாக 25 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கினார் உடன் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு சேகர் வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி தலைவர்  பாலகணேஷ் வேலூர் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர்  ஸ்ரீனிவாசன் வேலூர் மாநகர மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர்  தினேஷ் மாறன் வேலூர் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர்  ராஜேஷ் கண்ணா வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் முனியப்பன், வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் தொடங்கலாம் - UGC.

கல்லூரிகளுக்கான 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் தொடங்கலாம் - UGC நடப்பு கல்வியாண்டில், ஆகஸ்ட் முதல் தேதிமுதல் அனைத்துக் கல்லூரிகளையும் தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. முதல் ஆண்டில் சேர உள்ள புதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை தொடங்கலாம் என்றும், செப்டம்பர் முதல் தேதியில் இருந்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே வகுப்புகளை தொடங்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை எளிமைப்படுத்தவும் தேர்வு எழுதும் நேரத்தை மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக குறைக்கவும் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை -காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்.

Image
காஞ்சீபுரத்தில் நலவாரிய அடையாள அட்டை வைத்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை - கலெக்டர் தகவல் காஞ்சீபுரம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டையை வைத்துள்ள பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலோ அல்லது ஓய்வு பெற்று இருந்தாலோ கொரோனா நிவாரண உதவிதொகையாக ரூ.1000 பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வரக்கூடாது இந்த நிவாரண உதவித்தொகையினை பெறுவதற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் தாட்கோ அலுவலகத்தில் மாவட்ட மேலாளர் மா.கு.தேவசுந்தரியை 04427237842 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 9445029462, 9003372688 என்ற எண்ணுக்கும் வாட்ஸ்-அப் மூலம் நலவாரிய அடையாள அட்டையின் விவரத்தை படம் எடுத்து அனுப்பிவிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

வேளாண் விளைபொருட்களை விற்க தமிழக அரசின் கட்டணமில்லா சேவை..

Image
வேளாண் விளைபொருட்களை விற்க மற்றும் வாங்க தமிழக அரசின் கட்டணமில்லா சேவை.. கொரோனா வைரஸினால் தற்சமயம் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் விளைபொருட்களை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தாங்களாகவே வியாபாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்திட ஒரு “கட்டணமில்லா உழவன் இ சந்தை” எனும் சேவையை “உழவன் செயலி” மூலம் உருவாக்கியுள்ளது இந்த சேவையின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளை பொருட்களையும் பதிவு செய்து கொள்ளலாம். வியாபாரிகள் மாவட்டம் வாரியாக மற்றும் பயிர் வாரியாக விவசாயிகள் விற்பனை செய்யவுள்ள விளைபொருட்களை இச்செயலின் மூலம் பார்த்து விருப்பம் தெரிவிக்கலாம். உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு லாபகரமான விலையில் விற்பனை செய்து பயனடையலாம். எனவே உழவர் பெருமக்கள் அனைவரும் உழவன் செயலியில் உள்ள உழவர் இ சந்தை சேவையை பயன...

இந்தியர்களுக்கு விசா நீட்டிப்பு:இங்கிலாந்து முடிவு...

Image
லண்டன்: இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களுக்கான விசா காலத்தை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்கஇங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறிஇருப்பதாவது: இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை துறையில் பணியாற்றும்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஓராண்டிற்கான விசா காலம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம்31 ம் முதல் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை முடிவடைய உள்ள விசாக்கள் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் சுமார்3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைவர் என கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறியதாவது: நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். விசா காலம் நீட்டித்திருப்பது அவர்களுக்கு மி க பயனுள்ளதாக அமையும் மேலும் அவர்கள், பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடியும் என கூறினார்.

கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம் : போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்.

Image
சென்னையில், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், மக்கள், ஒரே நாளில் கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம்' என, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சென்னையில், நான்கு நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல், முழு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகள், மாலை, 5:00 மணி வரை திறந்து இருக்கும். மக்கள், ஒரே நாளில் கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நாளையில் இருந்து, அந்த கடைகள், மதியம், 1:00 மணி வரை திறந்து இருக்கும்.அத்துடன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம். அனைத்து பொருட்களும் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கின்றன. காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்துள்ளது. கடைகளுக்கு செல்லும்போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.பொது மக்கள், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது; அங்கு யாரும் செல்ல வேண்டாம்.இவ்வா...

வாலாஜா நகரம் முழுவதும் இயற்கை கிருமி நாசினி தெளிக்க அனுமதி.

Image
வாலாஜா நகரம் முழுவதும் இயற்கை கிருமி நாசினி தெளிக்க அனுமதி அளித்த மஹாலஷ்மி செவிலியர் கல்லூரி உரிமையாளர் திரு. பாலாஜி லோகநாதன் அவர்களுக்கு வாலாஜா நகர மக்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். குமரன்ரவிசங்கர். M. A., (167முறை இரத்த தானம் செய்தவன் ). ஓம் சாய்ராம்.

வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளையின் சார்பில் உதவி வழங்கிய போது..

Image
இன்று அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளையின் சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கழனிப்பக்கம் கிராமத்தில் நலிந்த நம் முத்தரையர் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வீரமிகு J.  சரவணன் அவர்களின் ஆணைக்கு இணங்க நேரில் சென்று நல திட்ட உதவிகளை  அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு.  வினோத்குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் திரு.  சுதாகர் சரத், சரவணன், வெங்கடேசன், மணிகண்டன், சந்தோஷ், பிச்சான்டி, ராமு, அஜித்குமார் வழங்கினர்..  நல திட்டத்திற்கு தேவையான காய் கறிகள்,  அரிசி போன்றவற்றை அறக்கட்டளையின் பொருளாளர் திரு.  V.  சத்தியமூர்த்தி மேற்பார்வையில் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு.  ஹரிகிருஷ்ணன் காட்பாடி,  இளைஞர் அணி  பொருளாளர் திரு.  சரத்குமார்,  மாநகர் தலைவர் திரு.  ஜெகன் விருதம்பட்டு.. ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். அதே போல் தேனி மாவட்டத்தில் உள்ள நமது இன மக்களுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் திரு.  ஐயனார்,  செயலாளர் திரு.  பாண்டியராஜ், பொருளாளர் த...

வேலூர் மின் கட்டண மையத்தில் காமராஜ் கபசுரக்குடிநீர் வழங்கி. வருகிறார்..

Image
வேலூர் கோட்டை சுற்றுச் சாலை மின்வாரிய பொது வசூல் மின்கட்டணம் மையத்தில் தினமும் வருவாய் மேற்பார்வையாளர் வே. காமராஜ் அவரின் சொந்த செலவில் கபசுர குடிநீர் அனைத்து ஊழியர்கள் மற்றும் மின் நுகர்வோர் களுக்கு கடந்த 25 நாட்களாக தினமும் சமூக விலகல் கடைபிடித்து மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வந்து கிருமி நாசினி மருந்து  தெளித்து மின்நுகர்வோர்கள் கைகழுவிய பிறகு மின்கட்டணம் செலுத்த வைத்து கபசுர குடிநீர் வழங்கிகொண்டு வருகின்றார். திருமதி மகேஸ்வரி ,ஷாகிதா கணக்கீட்டு ஆய்வாளர்  ,லட்சுமணன் FM. மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

வேலூர் கொணவட்டம் பகுதியில் மளிகை, காய்கறிகள் உதவி செய்த தினேஷ் சரவணன்...

Image
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் பொது மக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கி வரும் பட்சத்தில்,வேலூர் பகுதியில் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று  வேலூர் கொணவட்டம் பகுதியில் பீடி சுற்றும் தொழில் செய்யும் 30 பேர் தங்களுக்கு வருமானம் இல்லாததால் உதவுமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தகவல் சமூக நலனில் சேவை செய்து வரும் தினேஷ் சரவனனுக்கு தெரிந்ததும் உடனேமாநகராட்சி மண்டலம் 2 சுகாதார அலுவலர் திரு. சிவக்குமார்  அவர்களிடம் தொடர்பு கொண்டு நான் உதவி செய்கிறேன் என்று அப்பகுதி 30குடும்பத்தினர் க்கு சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் மளிகை மற்றும் காய்கறிகள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று இலவசமாக வழங்கப்பட்டது. செய்தி .வேலூர் நண்பன் இதழ் 

வேலூர் தோட்டப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கபசுரக்குடிநீர் வழங்ப்பட்டது

Image
 வேலூர் தோட்டப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்து முன்னணி சேர்ந்த ஆதிமோகன் அவர்கள் பெரியஅருகந்தபூண்டி தெருவில் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி உதவி செய்துவருகிறார்கள். அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று இடைவெளியில் நின்று அருந்திய போது எடுத்த படம். செய்தி வேலூர் நண்பன் இதழ் படம். பிரசாந்த்  

VSஐசக் கல்வி குழுமத்தின் சார்பில் ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி....

Image
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வாழ்வாதரம் இழந்து வீட்டிலே முடங்கி கிடக்கும் ஆட்டோ ஒட்டுனர் மற்றும்ஏழை எளிய மக்களுக்கு அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனம் சார்பில் அதன் அலுவலகமான ஜவகர் அரக்கோணத்தில் இன்று  29/04/20/   அரிசி  மளிகை பொருட்கள் மற்றும் காய்வகைகளை V.s. ஐசக்கல்வி குழுமத்தின் நிறுவனர் திருமிகு V.s ஐசக் அய்யா அவர்கள் மற்றும் திருமதி உமா சென்னை அவர்கள்உதவியால் வழங்கப்பட்டது உதவியமைக்கு   மனமார்ந்த நன்றி நிகழ்வில் திரு V.S.ஐசக்அய்யா திரு C.தேவசித்தம் திரு.எஸ்.ஜேக்கப் திரு எஸ்.ஜட்சன் திரு.ஆசிரியர் தைரியம் ஆகியோர் பங்கேற்றனர். செய்தி. வேலூர் நண்பன் இதழ் 

காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் வடமாநிலத்தவர்க்கு உதவி....எஸ். ஆர். கே.அப்பு (ம)பி.டி.கே.மாறன்

Image
காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு எஸ்.ஆர். கே. அப்பு மற்றும் பி.டி.கே.மாறன் ஆகியோர் அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம் . செய்தி வேலூர் நண்பன் இதழ் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆய்வு நடத்தினார்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் வேலூரில் கொரோனா வைரஸ்நோய் தொற்று பரவு வதை தடுத்திட எடுக்கப்பட்டுவரும் தொடர் தீவிர நடவடிக்கைப் பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களுடன் ஆய்வு நடத்தினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப.,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த் தீபன், வருவாய் கோட்டாட்சியர் திரு.கணேஷ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.செல்வி, இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் டாக்டர்.யாஸ்மின்,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.மணிவண்ணன் உள்ளனர்.  

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (29-04-2020)  சென்னை தலைமை செயலகத் திலிருந்து காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுத்திட எடுக்கப்பட்டுவரும் தொடர் தீவிர நடவடிக்கைப்பணிகள் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகளின்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அனைத்து அரசுஅலுவலர்கள்,காவல்துறையினர், பொறுப்புஅலுவலர்கள், தன்னார் வலர்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குபவர்கள் உட்பட அனைவரும் நாளை (30-04-2020) முதல் நடைபெறும் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொள்வது மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன் மகளிர் திட்ட இயக்குநர் திரு.சிவராமன், உள்ளனர்.  

பண்பாடு சாற்றும் வெகுமதி விந்தைக் கலையான உலக நடன தினம் -முனைவர். பெ. தமிழ்ச்செல்வி

Image
உலக நடன தினம் நடையில் அலங்காரம் அபிநயத்தில் அச்சு பிசகாமை முகத்தில் பாவம் பிரதிபலிப்பு உடலசைவு  இசையோடிணைந்து காண்பவரை கட்டிப்போட்டு சிந்தாமல் சிதறாமல் உணர்வுகளை உரசி தன்னோடு பயணிக்க விடும் செப்பிடு வித்தைக்  கலையான பண்பாடு சாற்றும் வெகுமதி விந்தைக் கலையான உலக நடன தினம்! நான்முக நாயகன் , நாராயணின் உந்தி பிறந்தோன், கலைமகளின் துணைவன், ஆறுமுக வேலவனிடம்  பிரணவ மந்திரம் அறிந்த யுகங்கள் 4 அளித்த பிரம்மன்...      *ரிக் வேதமிடருந்து பொருள்       *யஜூர் ..லிருந்து அபிநய பாவம்       *சாமம் வேதம் ..தந்த பண்        *அதர்வணம் கண்ட நவரசம் அத்தனையும் அள்ளிக் குறையாமல்  மாலையெனத் தொடுத்து பரத முனிவருக்குத் தாரை வார்க்க, முக்கண்ணன் முன்வந்து  தண்டு முனிவர் மூலம் தாண்டவம் வாரி வழங்க, பார்வதியும் லாஸ்ய நடனம் அருள நடனக்கலையின் நர்த்தனம் ஆரம்பமானது! நடன தத்துவம் பாரதி சொன்ன நிதர்சனம் "சொல்லு சொல்லென்று துடிக்குதென் உதடும் நாவும்"! 25.01.2015..ல் ஸ்டான்போர்ட் சொன்ன தத்துவம் "நடன நுண்கலை என்பது மதிப்பீடு செய்து, மனங்குள...

வேலூர்: ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ அவர்கள் மூன்றாம் கட்டமாக மளிகைப்பொருட்களை வழங்கினார்.

Image
வேலூர் தொகுதி வேலூர் மாநகரம் கழகத் தலைவர் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மாண்புமிகு_தளபதி அவர்களின் ஆணையை ஏற்று வேலூர் மாநகரத்தில் உள்ள மூன்றாம் கட்டமாக சுமார் 300 ஆட்டோ ஓட்டுனரகள் குடும்பங்களுக்கு வேலூர் மக்களின் ஏழைப்பங்காளன் மாநகரத்தின் முதல் மேயர் மா நகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் அரிசி கோதுமை மாவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார் அருகில் மாவட்டக் கழக அவைத் தலைவர் அண்ணன் தி.அ.முகமதுசகி அவர்களும் மாவட்ட துணை செயலாளர்   ஆர் பி.ஏழுமலை அவர்களும் பகுதி கழக செயலாளர்கள்ஆர். சத்தியமூர்த்தி சி.சந்திரசேகரன் டி.சக்கரவர்த்தி பொதுக்குழு உறுப்பினர்எஸ். தயாள்ராஜ் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் விஜய் துணை அமைப்பாளர்கள் ஆர்அருண் ஆர்கருணா எம்கே.சாமி மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.தாமோதரன்  கஸ்பாகே.சரவணன் ஜி.முரளி வக்கீல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

இராணிப்பேட்டை: ஆர்.காந்தி,MLA ஏழை எளிய மக்களுக்கு மளிகைப்பொருட்களை வழங்கினார்.

Image
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி,MLA அவர்கள் இராணிப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சுமாா்   50.நபர்களுக்கு இலவச அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப்பொருட்களை ஆர்.காந்தி,MLA அவர்கள் வழங்கினார் உடன்ஆற்காடு ஈஸ்வரப்பன்,MLA கலந்துகொண்டனா்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...