குப்பை எடுக்கவரும் ஊழியர்களை மதிக்கும் வகையில் விழிப்புணர்வு...
வேலூர் மாநகராட்சி மண்டலம்-2ல் குப்பை போடும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து போடும்படி வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பை எடுக்க வருபவர்களும் மனிதர்கள் தான், அதனால் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் அன்பான கோரிக்கை வைக்கப்பட்டது. கூடவே குப்பைகளை எவ்வாறு பிரிப்பது என அரசு வழிகாட்டியுள்ள துண்டு பிரசுரங்களை வழங்கினோம்.
மாநகராட்சி அதிகாரிகள் அவர்களும் உடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என தினேஷ் சரவணன் தெரிவித்தார் மேலும் அனைத்து வீட்டு உரிமையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தனர்.
Comments
Post a Comment