மாசிஅமாவாசை மயான கொள்ளை வரலாற்று மிக்க தொகுப்பு....
23/2/2020 அன்று ஞாயிறு வியாபார விருத்தி தரும் மாசி அமாவாசை விரதம் !மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு ! மேல்மலையனூர் கோயில் தல வரலாறு! அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன? மயான கொள்ளை விழா எப்படி உருவானது?என்ற விவரங்களும் பதிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன.
அமாவாசை விரதம்
கடுங்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதம் ஆகும். இந்த மாசி மாதத்தில் ஆன்மீக சிறப்புமிக்க மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலி பண்டிகை போன்ற பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் பல சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி விழாக்களும் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்த மாசி மாதத்தில் வரும் மாசி அமாவாசை தினமும் ஒரு முக்கியமான தினமாகும்.
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! மேல்மலையனூர் கோயில் தல வரலாறு! அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன? மயான கொள்ளை விழா எப்படி உருவானது?
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு மேல்மலையனூர் கோயில் தல சக்தி வழிபாடனது நம் தமிழர்களின் பழமையான வழிபாடாகும். கொற்றவை (காளி) பாலை நில கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கருதப்பட்டு வழிப்பட்டு வந்தனர்.
இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாளே எங்கு பார்ப்பினும் விண் அதிர பம்பை மற்றும் உடுக்கை ஓசையும், பாடல்களும் ஒலித்து கொண்டு இருக்கும்.
அஷ்ட திக்கினையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் ஆகும்.
எவ்வாறு அங்காளி மலையனூரில் குடி கொண்டாள் மற்றும் மயான கொள்ளை ஏன் நடத்தப்படுகிறது? அதன் சிறப்பு என்ன? என்பதனை காண்போம்.
பிரம்மனின் ஆணவத்தை அழிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றி கொண்டது.
பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கரத்தில் பிரம்ம கபாலமாக ஒட்டி கொண்டது.
சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார்.
இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.
சிவன் பிச்சையெடுக்கும் உணவனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது.
இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார். மகா விஷ்ணுவின் அலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.
பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள்.
முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது.
மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது.
ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள்.
பிரும்ம கபாலம்: ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் பிரும்மன் அகந்தை கொண்டான். எனவே அவனது ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவன். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவனே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரும்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார் ஈசன். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரும்ம கபாலம் விழுங்கிவிடும்.
சரஸ்வதி சாபம்: பிரும்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த ஈஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி எங்கும் அலைந்து இறுதியில் மேல்மலையனூரில் வந்து அமர்ந்தாள் பரமேஸ்வரி. மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவளிடம் பிச்சை கேட்டு வந்த சிவனின் பாத்திரத்தில் முதல் உருண்டையைப் போட்டாள். அதனை உண்டது பிரும்ம கபாலம். இரண்டாவது உருண்டையையும் போட்டாள். அதனையும் உண்டது. மூன்றாவது உருண்டையை பிரும்ம கபாலத்தில் போடாமல் கீழே போட்டாள். அதனை உண்ண சிவனின் கையில் இருந்து இறங்கியது. ஈஸ்வரி விஸ்வரூபமெடுத்து பிரும்ம கபாலத்தை பூமியில் அழுத்தினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
மாசி அமாவாசை: ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் சூரை இடும் நாளே "மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு.
சூளையில் குடிகொண்டாள்: சென்னையில் புரசைவாக்கத்தை ஒட்டிய பகுதி சூளை. இங்கே அங்காளம்மன் குடிகொண்டிருக்கிறாள். சக்தி தீர்த்தம் என்னும் திருக்குளத்தின் கரையில் அமர்ந்திருப்பவளை வழிபட திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீய சக்திகள், பில்லி - சூனியம் ஆகியவை விலகும்.
அங்காளி: மூல ஸ்தானத்தில் அருளும் அங்காளி நான்கு கரங்களுடன் இடது காலை மடித்து, வலதுகாலை தொங்க விட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். இடது தொடையில் இவ்வுலக ஆன்மாக்களை தாயுள்ளத்தோடு காக்கும் அம்மாவாக வைத்துக்கொண்டு சூலமும் கபாலமும் தாங்கி, மேலிரு கரத்தில், அபய - வரதத்துடன் அருள்பாலிக்கிறாள்.
முன்புறம் சிலா ரூபம், கொடிமரம், பலி பீடம்,, சிம்ம வாகனம் உள்ளன. சந்நிதியின் முன்புறம் விநாயகரும், இடப்புறம் வீரபத்திரர் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்தின் இடப்புறம் சிவனின் படைத்தலைவனாகிய பாவாடை ராயனுக்கு என தனி சந்நிதி உள்ளது. இதைத் தவிர காசி விசாலாட்சி - காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி இருக்கிறது. நாகம்மனுக்கும் சந்நிதி உள்ளது.
மயானக் கொள்ளை: இத்திருக்கோயிலில் நடைபெறும் மயானக்கொள்ளையைத் தொடர்ந்து அங்காளபரமேஸ்வரிக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்து பத்து நாட்கள் வீதி புறப்பாடு உற்ஸவம் நடைபெறுகிறது.
மாசி அமாவாசையன்று மூலவர் அங்காள பரமேஸ்வரிக்கும் உற்ஸவருக்கும் இரவு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்தைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட பூங்கப்பறையுடன் படாளம் மயானத்திற்குச் சென்று அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆண் உருவை சித்தாங்கம் என்னும் பிரார்த்தனை செலுத்துவோர், மருளாடிகள் ஆகியோர் பூஜை செய்வர். இதற்கு சுடுகாட்டு சுவாமி என்று பெயர். அதனை பூஜை செய்து கலைத்துவிட்டு வருவார்கள்.
மீண்டும் பூசாரி தலைமையில் ருத்ர கப்பறையுடன் சென்று அங்கு செய்து வைக்கப்பட்டிருக்கும் அலி உருவையும், நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் பஞ்ச முகக் கப்பறையுடன் பூசாரி தலைமையில் சென்று, செய்து வைக்கப்பட்டிருக்கம் பெண் உருவையும் கலைத்துவிட்டு வருவர். மீண்டும் அதே பொருட்களைக் கொண்டு ஓர் உருவை மயானக் கொள்ளையிடுவதற்காக செய்வர்.
காலை 8 மணிக்கு அங்காள பரமேஸ்வரி பூரண அலங்காரத்துடன் மயானக் கொள்ளை விடுவதற்காக செல்வாள். வழியெல்லாம் பக்தர்கள் காய், பழம் தானியங்கள், காசுகள் போன்றவற்றையெல்லாம் செல்லும் பக்தர்களை நோக்கியும் சித்தாங்க பிரார்த்தனைதாரர்கள், மருளாடிகள் ஆகியோரை நோக்கியும் வீசுவர். அனைவரும் ஒன்றாகச் சென்று பொருட்களை சுடுகாட்டில் நான்காவதாகப் போடப்பட்டிருக்கும் சுடுகாட்டு சுவாமியின் மீது வீசி அதனை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு வருவர். அங்கிருந்து கிளம்பி சூறை விட்ட வெற்றிக் களிப்புடன் அங்காளபரமேஸ்வரி இரவு 8 மணிக்கு திருக்கோயிலை அடைவாள்.
சொல்வது என்ன?: மூன்று வகை கப்பறையும் அங்காள பரமேஸ்வரியின் சக்திகளாகச் சென்று ஆண், பெண், அலி உருக்களை பூஜை செய்துவிட்டு வருவது அனைத்தையும் காப்பவள் அங்காள பரமேஸ்வரி என்னும் தத்துவத்தை விளக்குகிறது. சூரை விடச் செல்லும்போது முன்னால் செல்லும் சிவகணங்களிடம் சிவனுக்காக பிச்சையிடும் புனிதச் செயல் நடக்கிறது. சுடுகாட்டில் சென்று சூறையிடும்போது மேலே கவளம் கவளமாக எறிவது பிரும்மகபாலத்தை பிச்சைச்காக கீழிறக்கிய வரலாற்றைக் குறிப்பிட்டு பிரும்மஹத்தி தோஷம் போகும் என்பதைச் சொல்கிறது.
சூளை அங்காள பரமேஸ்வரியின் "மயானக் கொள்ளை' என்பது நம்பியவர்களைக் காத்து, இரட்சித்து, அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக் காட்டும் தத்துவ விழா என்றால் மிகையில்லை.
மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?
அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின.
அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.
போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.
தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார்.
அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறுஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது (mayna kollai) நடைபெறுகிறது.
அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதாள். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.
அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன?
காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர்.
அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.
2020 இல் மயான கொள்ளை
இந்த ஆண்டு அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
சிவராத்திரி இரவிலிருந்தே திருவிழாத் துவங்குகிறது. பின் அம்மன் கண்திறப்பு, இரத்த பலி வீசுதல், அமாவாசை மதியம் மயான கொள்ளை, ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
மாசி அமாவாசையில் அம்பிகை முழு சக்தி பலத்தோடு வீற்றிருப்பாள். அன்றைய தினம் சென்று அகில உலக நாயகியான அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வேண்டிய நலன்களைப் பெறுவோம்.
பித்ரு தர்ப்பணம்
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடல் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும். அமாவாசை, கிரகணம், புரட்டாசி மகாளயபட்ச காலம், தமிழ் மாதப் பிறப்பு என மொத்தம் 96 வகையான தர்ப்பணங்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த 96 தர்ப்பணங்களையும் செய்ய முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலான காலங்களிலாவது அவசியம் தர்ப்பணம் செய்து, முன்னோரை வணங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்.
திருஷ்டி
மாசி அமாவாசை தினமான வரும் ஞாயிறு அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் தர வேண்டும். இந்த சடங்குகளை முடித்த பின்பு சடங்குகளை செய்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணி காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.
Comments
Post a Comment