அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன்


வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கம் சார்பில் " சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்விழா " நடைபெற்றது. சங்கத்தலைவர் லயன்.ச.மணிபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஊர் பெரியதனம் வேணுகோபால் முதலியார் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். கவிஞர்.ச.இலக்குமிபதி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டலத்தலைவர் லயன்.ராஜு, வட்டார தலைவர் லயன்.தேவதாஸ், மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முகசுந்தரம், மனோகரன், வெங்கடேசன்,தேசி, சங்க பொங்கல் விழா சேர்மென் லயன்.எம்.ஜெயவேலு, முன்னாள் தலைவர்கள் சுமதி மனோகரன், சுதாகர்,ஜீவரத்தினம், சங்க செயலாளர் லயன்.கேசவன், சங்க பொருளாளர் லயன்.காசி  மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.