Posts

Showing posts from December, 2019

யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் ..

யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் ! யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் சீதை.  அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீசக்ரபூர்ண_மகாமேரு.  விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீ புரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு_பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும. அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ ...

குளிக்கும் தண்ணீரில் மரம் வளர்ப்போம்

குளிக்கும் தண்ணீரில் மரம் வளர்ப்போம்   சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க  சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்.. ஒரு மனிதன்  ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர்  அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது. துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும். சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி  தலைக்கு குளிக்கும் பொழுது  அந்த அழுக்கை  உண்ண  மீன்கள் ஓடிவரும். பாத்திரம் கழுவ  இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில்  சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல்  போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின . ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை. அதன...

பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்..

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே? 6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்? 7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்? ஏன்? ஏன்? ஏன்? காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று. நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று. எங்கள்...

 உலர்திராட்சையின்பயன்கள்

 உலர்திராட்சையின்பயன்கள்.. உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை  பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இருந்த பிரச்சினைகளை சொல்லிவிடுகிறேன். 1) மூக்கடைப்பு ( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்) 2)படிப்பில் கவனமில்லை (அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை) 3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை (ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்) 4)படப்படப்பு ( சிறிய விஷயமானாலும் டென்சன், அதீத இதயத்துடிப்பு. 5)உடல் பலவீனம். நான் உலர்திராட்சையை  சாப்பிட ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் மூக்கடைப்பு சரி ஆனது. இரண்டு மாதத்தில் படப்படப்பு, இதயத்துடிப்பு சீரானது. 3வது 4வது மாதத்தில் சைனஸ் பிரச்சினை சரி ஆனது. ஜஸ் சாப்பிட்டாலூம் சளி பிடிக்கவில்லை. 5,6 வது மாதத்தில் உடல் பலமானது எனக்கு தெரிந்தது. அதே 5வது 6 வது மாதத்தில் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டபோது எனது நினைவுத்திறன் 200,300மடங்கு அதிகமானது. படித்தால் மண்டையில் பதியாதது எல்லாம் சாதரணமாக பதிந்தது. உலர்திராட்சியை சாப்பிடுவதற்கு முன் ஒரு அரசு போட்டித்தேர்வில்...

சுண்ணாம்புவின் பயன்கள்...

சுண்ணாம்புவின் பயன்கள்...!!! எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது. சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும். பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம். ம...

மனிதனின் வாழ்க்கை....

மனிதனின் வாழ்க்கை.... 5 வயதில் விரல்களை எண்ணினான், 10 வயதில் எண்களை எண்ணினான், 15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான், 20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான் 25 வயதில் சம்பளத்தை எண்ணினான், 30 வயதில் நண்பர்களை எண்ணினான், 35 வயதில் வாரிசுகளை எண்ணினான், 40 வயதில் கடன்களை எண்ணினான், 45 வயதில் நோயை எண்ணினான், 50 வயதில் சொந்தங்களை எண்ணினான், 55 வயதில் மாத்திரையை எண்ணினான், 60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான், அதற்கு பின் வயதை எண்ணினான், இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான். எண்ணிப் பார்க்கையில் ,  தன்னிடம் கூடவே இருந்தது கணிதம் மட்டும் தான்  என எண்ணினான் !! விடை என்னவோ தொடக்கமும் முடிவும்"0" தான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உமிழ்நீர்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உமிழ்நீர் இதற்கான அரு மருந்து உங்கள் வசமே உள்ளது    சர்க்கரை நோய்க்குக்காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காது தான்  ஆணா இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது? உமிழ்நீர் தான். சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் உண்டு என்பதைப் பார்ப்ப்போம். உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.   உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.    வாழ்வதற்காக  உண்டனர். உண்பதற்காக வாழ்ந்தனர். அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர். அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். அதேபோல் உணவு உண்ணும் 30 நிமிடம் முன்னதாக உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும் நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொ...

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு)

Image
கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு)     இறைவர் திருப்பெயர் : அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்).இறைவியார் திருப்பெயர்:பாகம்பிரியாள்.தல மரம்:இலுப்பை. தீர்த்தம் :தேவ தீர்த்தம்.வழிபட்டோர்:கேதார கௌரி. தல வரலாறு மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.   மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.   கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.   சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.   இத்தலத்துச் சொல்லப...

புத்தாண்டு 1-1-2020 ஸ்ரீ வன துர்கா முல மந்திர ஜப ஹோமம்.

Image
நமோ வன துர்கா நமோ வன துர்கா                      நமது ஸ்ரீ வன துர்கா பீடத்தில் வர இருக்கும் ஆங்கில புத்தாண்டு 1-1-2020 புதன் கிழமை அன்று மத்தியம்  12.00 மணி அளவில் ஸ்ரீ வன துர்கா முல மந்திர ஜப ஹோமம், மற்றும் ஸ்ரீ மஹா சரஸ்வதி  முல மந்திர ஜப  ஹோமமும், கோ மாதா பூஜையும்  உலக நலனுக்காகவும் நம் இல்ல குழந்தைகள் கல்வி  மேன்மை, ஞாபக திறன் மேன்மைக்காகவும் நடைபெற இறைவி அருள் கூட்டி உள்ளதால் பக்த ஜன பெருமக்கள் திரளாக வந்து அன்னையின் அருளையும் குரு அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். ஸ்ரீ வனதுர்கா பீடம் , ஸ்ரீ  மஹா சரஸ்வதி தேவஸ்தானம் , தேசிய நெடுஞ்சாலை , M C ரோடு, இறைவன்காடு , வேலூர் மாவட்டம் . 632104 போன் நெம்பர் 98941 61047

வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம்

Image
வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம் வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம்     விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம். வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி. தல வரலாறு: வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது ப...

மானுட பண்புகள் மலர வேண்டுகிறேன் !

மானுட பண்புகள் மலர வேண்டுகிறேன் ! மனதைத் தொட்ட பதிவு...! பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான். அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத...

வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்றம்..

Image
வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்றம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறந்த நாள் டிசம்பர் மாதத்தை முழுவதும் கொண்டாடலாம் வகையில்  ரஜினி மக்கள் மன்றம் மண்டலம் 2 சார்பில் வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் வேலூர் நிர்வாகிகள் ஆயர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ந்த போது எடுத்த படம்.  

சனியனேமூதேவிஎன்றுதிட்டினால்என்ன நடக்கும்எனதெரியமா

Image
சனியனேமூதேவிஎன்றுதிட்டினால்என்ன நடக்கும்எனதெரியமா சனியனேமூதேவிஎன்றுதிட்டினால்என்ன நடக்கும்எனதெரியமா சனியனேஎன்றுஏன் திட்டக்கூடாது!! நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம். ஆனால் அப்படி யாரையும் நாம் சனியனே என திட்டக்கூடாது. அவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் நினைத்து, சனீஸ்வர பகவான் அவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். அதனால் அவ்வாறு சனியனே என்று திட்ட கூடாது!!!ஆபத்தான சொல்!! சனீஸ்வரனை மந்தமான கடவுள் என்று அனைவரும் கூறுவர். அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. மேலும் சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் மெதுவாகவே சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும். அந்த வகையில் "சனியனே" என்ற  சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்து விட்டால் ...

அர்த்தஜாம அழகர்

அர்த்தஜாம அழகர் ( சிதம்பரத்தின் தனித்துவங்கள்) சிதம்பரத்தின் அர்த்தஜாமம் (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாமம் மிக தாமதாக அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு மேல் நடைப்பெறும். இதனைக் கண்டால் அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் கண்ட பலனை தரும்.  அனைத்து கோயில்களிலும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும். சிதம்பரத்தில் நடராஜர் பள்ளியறை சேர்ந்த பின் பிரம்மசண்டிகேஸ்வரர், பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்திர பாலகன் பூஜிக்கப்படுகிறார் ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில் பல்லியாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். சித்சபையின் கொடுங்கைகளில் வசித்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது, நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது, அழகிய சிவகணமாகும் பேறு கிடைத்தது, கோயிலை இரவில் காக்கும் வேலையும் கிடைக்கப்பெற்றது. அவரே அர்த்தஜாம அழகர். சித்சபையின...

நான் உடல் இல்லை,நான் இறப்பதில்லை

Image
நான் உடல் இல்லை, நான் இறப்பதில்லை "நாஹம் தேஹோ நமே ம்ருத்யு : ஸர்போகும் பச்ய மாம்ஸதா  பக்தோ மாம்ஸ்மரதே யந்ரதத்ர திஷ்டாமி  ரக்ஷிதம்".  சாயி கூறுகிறார், நான் உடல் இல்லை. நான் இறப்பதில்லை. நானே எல்லாம். எப்பொழுதும் என்னை பாருங்கள். எங்கெல்லாம் பக்தன் என்னை நினைக்கிறானோ, அங்கெல்லாம் அவனைக் காப்பாற்ற நான் அங்கு நிற்பேன்.

இளம் விஞ்ஞானிக்கு வி.ஐ.டி.வேந்தரின் வியர்வையின் வெற்றி புத்தகம் வழங்கிய காட்சி

Image
இளம்  விஞ்ஞானிக்கு  வி.ஐ.டி.வேந்தரின் வியர்வையின் வெற்றி புத்தகம் வழங்கிய காட்சி அன் சகோதர சகோதரிகளே வணக்கம் வேலூர் மாவட்டம்  சித்தேரி  கிராமப் பகுதியை  சார்ந்த  இளம் விஞ்ஞானி  திரு, தேவேந்திரன் 11  வகுப்பு  மாணவன் அவர்களுக்கு இன்று நேரில் சந்தித்து விஐடி வேந்தர் அவர்களின் வியர்வையின் வெற்றி என்கின்ற சிறப்பு புத்தகத்தை உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுல மாணவன் சிவ கார்த்திகேயன்   அவர்கள்  புத்தகத்தை வழங்கி மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டதன்  புகைப்படம் .

சிவபெருமானாரை வணங்குவதாலும், சிவ வழிபாட்டினாலும் நாம் பெறும் நலன்கள்

சிவபெருமானாரை வணங்குவதாலும், சிவ வழிபாட்டினாலும் நாம் பெறும் நலன்கள் முதன்முதலில் பதிகத்தை சொல்லி அதனால் நாம் பெருமானுடைய அருளைப் பெறலாம் என்று வழிவகுத்தவர் காரைக்கால் அம்மையார். சிவபெருமானே தன்னுடைய அம்மை என்று சொல்லக்கூடிய அருமை பாடுடையவர் காரைக்கால் அம்மையார்.  சிவபெருமானாரை வழங்குவதாலும் சிவ வழிபாடு செய்வதாலும் கிடைக்கும் மூன்று பயன்களை  சொல்லி இருக்கின்றார் அவை பார்ப்போம்.. (1)பிறவி இனி வாராது ஒழியும் "யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்.. யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்.. கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற.. அம்மானுக்கு ஆளாயி னேன்." - காரைக்கால் அம்மையார். -அற்புதத் திருவந்தாதி சிவபெருமானாரை வணங்கவும், அவருக்குத் தொண்டு செய்யவும் ஆளானதே பெரும் புண்ணியம், பல பிறவிப் புண்ணியம் இருந்தால்தான் இப்பேறு கிட்டும். இதனால் இனிப் பிறவி இல்லாமல் போகும். (அம்மையார் பெற்றதைக் கூறியுள்ளதன் காரணம் நமக்காகவே) 2. எமன் தூதர்கள் நம்மிடம் வரமாட்டார்கள் "காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்.. மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல.. அரணார் அவிந்தழிய வெந்தியம் பெய்தான்.. சரண...

மார்கழி பஜன்ஸ் தோட்டபாளையம்..

Image
மார்கழி பஜன்ஸ் தோட்டபாளையம்... மார்கழி பஜன்ஸ் தோட்டபாளையம் வேலூர் சீனிவாசா பஜனை கோயில் ஆலயத்தில் திறளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரத்த தான முகாம்

Image
வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில்  இரத்த தான முகாம்..   வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள மங்களம் ஹாலில் இலவச இரத்த தான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் நீதி  ,பாண்டு,சதிஷ், டாக்டர். ஐயப்பன், சி.எம்.சி.டாக்டர், லயன் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரசிகர்கள் 70பேர் இரத்த தானம் வழங்கிய போது எடுத்த படம்.....

குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில்

Image
குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில் தமிழ் நாடு கிருஸ்தவ &சமூக நல சங்கம் மற்றும் சி.எஸ். ஐ.மத்திய ஆலயம் சமூக பொருளாதாரகுழுசுவிஷேஷ இணைந்து நடத்திய குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் வேலூர் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிசப் சர்மா நித்தியானந்தம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  நிகழ்ச்சியில் அப்சலோம்பர்னபாஸ்ஆயர் ஆனந்த் ஆகிமாஸ்துணைஆயர்மற்றும்ஜோஸ்வா, ஆண்ட்ரூஸ்,ஆரோன்,ஸ்டான்லி கலந்து கொண்டனர் நிகழ்ச்சி யைசாமுல்ஜாசன் ஏற்பாடு செய்திருந்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் MLA ஆய்வு

Image
வேலூர் MLA ஆய்வு வேலூர் மாநகரம் (தொகுதி) அண்ணாசாலையில் உள்ள தார்சாலை  நீன்டநாட்களக குண்டும்  குழியுமாக இருந்த சாலையை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்  ப.கார்த்திகேயன் MLA அவர்களின் முயற்சியால் போடப்படும் தார்சாலையை இரவு நேரத்தில் நேரில் சென்று பார்வையிட்ட போது....

 பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

Image
  பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் சத்துவாச்சாரி ரோட்டரி சங்கம் நடத்தும்  பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சத்துவாச்சாரி புவனேஸ்வரி மஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்...P.S.பழனி

Image
G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்... P.S.பழனி இன்று மக்கள் தளபதி ஐயா G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக வள்ளலார் முதியோர் இல்லத்தில் வேலூர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு P.S.பழனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு போர்வை,cake, வழங்கினார். உடன் வேலூர் மாவட்ட செயலாளர் K.சேகர், இளனரணி மாவட்ட துணைத்தலைவர் R.சீனிவாசன்,மாவட்ட பொது செயலாளர் A.முனியப்பன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் M. தினேஷ் மாறன், வெங்கடேசன்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம்

Image
அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம் 29-12-19அன்று அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி வேலூர் டவுன் ஹாலில் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா இணைந்து இரத்த தான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் எம்.எல்.ஏ.ப.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில்  ஸ்ரீபுரம்தங்ககோயில் இயக்குநர் உயர்திரு சுரேஷ் பாபு இரத்த தானம் வழங்கிய போது எடுத்த படம். உடன் காமாட்சி பாபு குமார், ராஜேஸ்  ,டிகேடி சீனிவாசன், இளங்கோவன் மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா நிர்வாகிகள்  பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அங்கன்வாடி மையத்திற்கு உதவி

Image
அங்கன்வாடி மையத்திற்கு உதவி முகநூலில் நாங்கள் செய்யும் சமூக சேவைகளை பார்த்து வந்த வேலூரைச் சேர்ந்த முகநூல் நண்பர் தன் வீட்டில் பயன்படாமல் உள்ள நிறைய புதிய பாத்திரங்களை இல்லாதவர்களுக்கு கிடைக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில்,  வேலூர் புதிய வசூர் மற்றும் இரங்காபுரம் பகுதியில் உள்ள இரு அங்கன்வாடி மையத்திற்கு(பால்வாடி) சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள சேர், டீ ட்ரம், குடம், தட்டு, குக்கர், அண்டா முதலிய பாத்திரங்கள் இலவசமாக அங்கன்வாடி ஊழியரிடம் வழங்கப்பட்டது. மொத்தம் 50 ஏழைக் குழந்தைகளுக்கு இது பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்கியவர்: திரு.பாலாஜி. நீங்கள் பதிவிடும் வாழ்த்துக்கள் அனைத்தும் இவரையே சேரும்.

பெங்களூர் இலக்கிய நிகழ்வில் நந்தவனம் சந்திரசேகர்

Image
பெங்களூர் இலக்கிய நிகழ்வில்  பெங்களூர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள். ஈழத்து எழுத்தாளர் யோகநாதன் சுப்ரபாரதி மணியன் கவிஞர் சொர்ணபாரதி இதழாளர் இசைக்கும்மணி கவிஞர் கருமலைத்தமிழாளன் முனைவர் இளவரசி முனைவர் எழிலரசி கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் சந்திரசேகர் உள்ளிட்டோர்!

அருணகிரிநாதர்

Image
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால், முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும், முருகப் பெருமான் மேல் பக்தி செலுத்தும் ஓர் ஆண்மகவு வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.முத்து செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளுக்கு அருள வேண்டும் என முருகன் திருவுள்ளம் கொண்டான். மூத்தபெண் ஆதிக்கு நான்கு  வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தை...

மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள்

Image
மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள் 28.12.2019 அன்று மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் R.J.மூர்த்தி தலைமையில்  வேலூர் திருப்தி-திருமலை தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.மாநர் மாவட்ட த.மா.கா துணைத்தலைவர் லயன்.தி.சண்முகசுந்தரம்,வி.கே.பழனிவேல்,கஸ்பா ஜெகன்நாதன், எஸ்.அச்சுதன்,மண்டலத் தலைவர்கள் வி.பழனி, லிங்கம் மற்றும் ரமேஷ், சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அண்ணா கபடி குழு நடத்தும் மாபெரும் கபடி போட்டி

Image
அண்ணா கபடி குழு நடத்தும் மாபெரும் கபடி போட்டி அண்ணா கபடி குழு நடத்தும் மாபெரும் கபடி போட்டி முதல் பரிசு ராஜன் பேரணாம்பட்டு இரண்டாம் பரிசு கோயம்புத்தூர் அணிகள் வெற்றி பெற்றன வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதிதாசன் வேலூர் மாவட்ட கபடி கழக இணைச் செயலாளர் பரிசுகள் வழங்கினார்.

பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள்.

பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள்.   ஶ்ரீ அபிராமி கோ.ஶ்ரீநிவாசனின் தெய்வீக ஜோதிட ஆன்மீக பதில்கள் மற்றும் வழிகாட்டல் ....... 12 லக்னங்களும் கோவில்களும்....  நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ''உங்களின் ராசி என்ன?'' என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம்.  ஆனால்,  ''உங்களின் லக்னம் என்ன?'' என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை  நோக்கும்போது லக்னம் என்ன  என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் 'ல' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் அது. உங்களின் மையச்  சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று  வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த ம...

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்..

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் கேள்விகளில் பெரும்பான்மையாக இருப்பது  குழந்தைகளின் கல்வி பற்றிய கேள்விகளே . மேலும் பல குடும்பத்தில் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர் குழந்தைகளுக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாலும் காலையில் பள்ளிக்கு கிளம்பவே நேரம் சரியாக இருப்பதால் பல குழந்தைகள் மந்திரம் ஜெபிக்க முடியாமல் போகிறது. பெற்றோராகிய நாமும் குழந்தைகளுடன் இருந்து  காலைப்பொழுதில் மந்திரங்களை ஜெபம் செய்யலாம்  என்றால் பெற்றோர்களுக்கு காலையில் குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கு அனுப்பவே நேரம் சரியாக இருப்பதால் இருவரும் ஒன்றாக இருந்து ஜெபிக்க வாய்ப்பு அமைவதில்லை. எனவே குழந்தைகளுக்காக முடிந்த நேரத்தில் பெற்றோர் மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்ளலாமா என்ற கேள்விக்குப் பதிலாக இந்த மந்திரத்தைப் பதிவிட்டிருக்கிறேன். இந்த மந்திரத்தை அதிகாலையில் ஜெபிப்பது சிறப்பு இல்லையென்றால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது ஜெபியுங்கள் ஆனால் குரு மற்றும் புதன் ஹோரையில் ஜெபிப்பது  நிறைவான பலனை தரும்... ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹ...

அமைதி மணம் கமழும் பூஜை அறை

அமைதி மணம் கமழும் பூஜை அறை..... வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.  பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்: சுவரின் வண்ணம்! பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப் படுத்தும் இயல்புடையவையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை சிறியதாக இருப்பதால், மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். வெளிர் மஞ்சள், வெளிர் ஆரஞ்சு போன்ற வண்ணங்கள் பூஜை அறையை அமைதியாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை. தனித்துவமான கதவு! பூஜை அறையின் கதவைத் தனித்துவமாக வடிவமைப்பது சிறந்தது. பூஜை அறைக் கதவைக் கூடுமானவரை மரச் சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைப்பது சிறப்பானது. பாரம்பரியமான பூஜை அறைத் தோற்றத்தை விரும்புபவர்கள் மர வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். நவீனத் தோற்றத்தை விரும்புபவர்கள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடிக் கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். பூஜை அறை எப்போதுமே திறந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை...

வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும்....

வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும்.... வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம்.  காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும்.  இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தாலும், நம்மை படைத்த இறைவனு க்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி எளிய முறை யில் பூஜை செய்வதும் நம் கடமை தான்.  இறைவனை நம் வீட்டில் முறையாக வணங்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் காணாலாம். பூஜை அறையை சுத்தம் செய்வது முதலில் நாம் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதல் நாள் நாம் இறைவனுக்கு பூஜை செய்திருப்போம் அல்லவா?  அந்த பழைய பூக்கள், பழைய ஊதுவத்தி சாம்பல் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்து புதிய தோற்றத்தை உண்டாக்க வேண்டும். அபிஷேகம் கோவிலில் செய்வது போன்ற அபிஷேகம் நம் வீட்டில் தினசரி இறைவனுக்கு செய்வது என்பது சாத்தியமில்லை.  ஆகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூவால் எடுத்து இறைவனின் பாதத்தில் இரண்டு சொட்டு சமர்ப்பிக்கலாம்.  நாம் அப்படி செய்யும் பொ...